‘டீஸ் நட்ஸ்’... 911க்கு போன் செய்து தவறாக பேசிய 12 வயது சிறுவன்... மன்னிப்பு கோரினான்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் அவசர கால ஹெல்ப்லைன் நம்பருக்கு போன் செய்து தவறாக பேசிய 12 வயது சிறுவன், தன்னை மன்னித்து விடும்படி கடிதம் வாயிலாக ஹெல்ப்லைன் மைய ஊழியர்களிடம் கோரியுள்ளான்.
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள சவன்னா நகரில் வசித்து வரும் 6வது கிரேட் படிக்கும் 12 வயது சிறுவன் ஒருவன், சமீபத்தில் அமெரிக்காவின் அவசர கால ஹெல்ப்லைன் நம்பரான 911க்கு போன் செய்துள்ளான்.
6th grader pens handwritten apology for calling 911 and yelling ‘deez nuts’: http://t.co/OGqv5IvIvX pic.twitter.com/4OS4AsL3BB
— New York Magazine (@NYMag) May 30, 2015 அங்கிருந்த ஊழியர்களிடன் "Deez nuts" என்று கூறிய சிறுவன், உடனடியாக அழைப்பைத் துண்டித்து விட்டான். இது போன்ற அழைப்புகள் வருவது வாடிக்கை என்பதால், ஊழியர்கள் யாரும் இந்த சம்பவம் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
ஆனால், சில நாட்கள் சென்றதும் தனது செயல் எவ்வளவு தவறானது என்பதை அச்சிறுவன் புரிந்து கொண்டான். எனவே, தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில், ஹெல்ப்லைன் ஊழியர்களுக்க்கு அவன் கடிதம் ஒன்றை எழுதினான்.
அதில், "நான் செய்தது முட்டாள்தனமான காரியம் என்று எனக்கு புரிகிறது. நான் செய்தது தவறுதான்., நான் கூறிய மோசமான வார்த்தைக்காக என்னை மன்னியுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தான்.
சிறுவனின் மன்னிப்பு கடிதத்தைப் பெற்ற ஹெல்ப்லைன் ஊழியர்கள், இனி இது போன்ற காரியங்களைச் செய்யக் கூடாதென அன்புக் கட்டளை இட்டுள்ளனர்.
தற்போது இந்தக் கடிதம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications