ஒரு போதும் ராஜினாமா செய்யமாட்டேன்: நவாஸ் ஷெரீப் பிடிவாதம்!
இஸ்லாமாபாத்: இம்ரான்கான் மற்றும் காத்ரி ஆதரவாளர்களின் கோரிக்கையை ஏற்று ஒரு போதும் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் மூலம் நவாஸ் ஷெரீப் வெற்றி பெற்றார் என்பது இம்ரான்கான் மற்றும் காத்ரி ஆதரவாளர்களின் குற்றச்சாட்டு. இதற்காக நவாஸ் ஷெரீப் உடனே பதவி விலக வேண்டும் என்று கடந்த 3 வார காலமாக இஸ்லாமாபாத், லாகூர், கராச்சியில் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

நாடாளுமன்றம் மீது தாக்குதல்
இந்தப் போராட்டங்களின் உச்சமாக நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பிரதமர் நவாஸ் ஷெரீப் வீடு முற்றுகையிடப்பட்டது. பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சியான பி டிவி சூறையாடப்பட்டது. இந்த மோதல்களில் 8 பேர் பலியாகி உள்ளனர். 500க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

ராணுவம் எச்சரிக்கை
இந்நிலையில் அந்நாட்டு ராணுவம், ஜனநாயக ரீதியில்தான் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்றும் எச்சரித்திருக்கிறது.

அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டம்
இதனிடையே அந்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்களிடையே நேற்று உரையாற்றிய பிரதமர் நவாஸ் ஷெரீப், நாங்கள் அரசியல் சாசனத்தின் கீழ்தான் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். சிலர் கோரிக்கை விடுப்பதற்காக ஒருபோதும் பதவியை ராஜினாமா செய்யவும் முடியாது. பதவியை விட்டு விலகி விடுப்பில் செல்லவும் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நவாஸ் மீது நம்பிக்கை
இந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், நாடாளுமன்றத்தின் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். ஜனநாயகத்தைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் நவாஸ் ஷெரீப் மேற்கொள்வார் என்று நாங்கள் நம்புகிறோம்.

உச்சநீதிமன்றத்தில்...
நாடாளுமன்றமே நாட்டில் அதிகாரம் படைத்த ஒன்று என்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களையும் வழக்கில் சேர்த்துக் கொள்ள மனுத்தாக்கல் செய்ய இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications