நான் மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்திருப்பேன்: முஷாரப்
வாஷிங்டன்: நான் மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்திருப்பேன் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் தெரிவித்துள்ளார்.
யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் எல்லை தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சென்று தாக்குதல் நடத்தியது. இதில் அங்கிருந்த 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பதிலடி
நான் மட்டும் ஆட்சி அதிகாரத்தில் இருந்திருந்தால் இந்தியா இப்படி தாக்குதல் நடத்தியதற்கு தக்க பதிலடி கொடுத்திருப்பேன். இந்த இடத்தில் இந்த நேரத்தில் தாக்குவோம் என அவர்கள் மிரட்டுகிறார்கள் என பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்கள். இது சீரியஸான விஷயம்.

இந்தியா
போர் சூழலை இந்தியா தான் ஏற்படுத்துகிறது என நான் நினைக்கிறேன். இந்தியா எப்பொழுதுமே இப்படி தான் செய்யும். இது ஒன்றும் முதல் முறை அல்ல. அது எப்பொழுதுமே இதை தான் செய்து வருகிறது.

பாகிஸ்தான்
பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்ததில் இருந்தே நாட்டில் ராணுவம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. பாகிஸ்தான் அரசிலும் ராணுவத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யும் அரசுகள் சரியில்லை.

ராணுவம்
பாகிஸ்தானில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் மக்கள் ராணுவ தளபதியிடம் தான் ஓடி வருகிறார்கள். பாகிஸ்தான் மக்களுக்கு ராணுவத்தை மிகவும் பிடிக்கும். அதனால் ராணுவத்தில் இருந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications