துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நிர்வாகக் குழுவினருக்கு வரவேற்பு
துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நிர்வாகக் குழுவினருக்கு 28.11.2016 திங்கட்கிழமை மாலை அன்னபூர்ணா உணவகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா தலைமை வகித்தார். அவர் தனது உரையில் ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப்பணிகள் குறித்து விவரித்தார். இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் ஒன்று அமீரகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

அதனைத் தொடர்ந்து இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் தாளாளர் வி.எம். ஜபருல்லா கான் அவர்களுக்கு ஈமான் அமைப்பின் தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
ஏற்புரை நிகழ்த்திய ஜபருல்லா கான், இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி கடந்த 1970-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. வரும் 2020-ஆம் ஆண்டில் பொன்விழா சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. அந்த விழா சிறப்புடன் நடைபெற தேவையான ஆதரவினை அளிக்க கேட்டுக் கொண்டார். மேலும் ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் சிறப்பான பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஜெ.அபுபக்கர் சித்திக், ஏ.எஸ். நசீர் கான், முதல்வர் திருமங்கலம் முனைவர் அப்பாஸ் மந்திரி, பேராசிரியர்கள் நாகர்கோவில் முனைவர் இப்ராஹிம், முதுகுளத்தூர் அபுபக்கர் சித்திக் ஆகியோர் பங்கேற்றனர்.
ஈமான் அமைப்பின் சார்பில் பொருளாளர் உபூர் காக்கா, ஆடிட்டர் நாகூர் ரவூப் அலி, பொதுச்செயலாளர் கீழை ஹமீது யாசின், துணைப் பொதுச்செயலாளர் பூதமங்கலம் முகைதீன் அப்துல் காதர், செயலாளர்கள் முதுவை ஹிதாயத், திண்டுக்கல் ஜமால் முகைதீன், கள்ளக்குறிச்சி காதர் முகைதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இளையான்குடி அபுதாஹிர், அதிராம்பட்டினம் நூருல் ஹக் மற்றும் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.












Click it and Unblock the Notifications