காஷ்மீர் விவகாரம்: ஐநாவும் கண்டுக்கலை.. முஸ்லிம் நாடுகளும் பேசலை... இம்ரான்கான் பெரும் புலம்பல்!
முசாபர்பாத்: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மாற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை மற்றும் முஸ்லிம் நாடுகள் எதுவும் பேசாமல் இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு மாகாண சட்டசபையில் இன்று இம்ரான்கான் பேசியதாவது:

எங்கள் வசமுள்ள காஷ்மீர் பகுதி மீது ஏதேனும் இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டால் பாகிஸ்தான் ராணுவம் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. நாங்கள் எந்த ஒரு அத்துமீறலையும் சகித்து கொள்ள மாட்டோம்.
வெளிநாடுகளில் உள்ள பாகிஸ்தான் தூதர்கள் சர்வதேச அரங்கில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர். ஒவ்வொரு சர்வதேச அரங்கிலும் ஜம்மு காஷ்மீர் விவகாரம் எழுப்பப்படும்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்திருக்கிற நடவடிக்கை தொடர்பாக சர்வதேச சமூகம் எதுவுமே எதிர்வினையாற்றாமல் இருப்பது விரக்தியைத் தருகிறது. இந்த பிராந்தியத்தில் போர் ஏற்பட்டால் அதற்கு சர்வதேசம்தான் பொறுப்பு.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஜம்மு காஷ்மீர் குறித்து 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இத்தீர்மானத்தின் மீதான ஐநா சபையின் நிலைப்பாடுதான் என்ன? நாங்கள் நிலைமைகளை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
பாகிஸ்தான் மக்களும் ராணுவமும் எதற்கும் தயாராகவே இருக்கிறோம். எந்த ஒரு அத்துமீறலுக்கும் நாங்கள் உடனடியாக பதிலடி தருவோம். 20 ஆண்டுகாலமாக பயங்கரவாதத்துக்கு எதிராக எமது ராணுவம் போராடி வருகிறது. எங்களது சுதந்திரத்தை பாதுகாக்க எங்கள் மக்கள் தயாராக உள்ளனர்.
கோடிக்கான முஸ்லிம் மக்கள், ஐநா சபை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஐநா மட்டுமின்றி இதர முஸ்லிம் நாடுகளான சவூதி அரேபியா, எமிரேட் ஆகியவை கூட பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லையே. இவ்வாறு இம்ரான்கான் பேசினார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications