தாய்மையை தாழ்த்துகிறது பெண்ணியம்.. இம்ரான் கான் சர்ச்சை டிவீட்
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் பெண்ணியம் தாய்மையின் பாத்திரத்தை தாழ்த்துகிறது என சர்ச்சை ட்விட் செய்துள்ளார்.
சென்னை: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும் அந்நாட்டின் அரசியல்வாதியுமான இம்ரான்கான், பெண்ணியம் தாய்மையின் பாத்திரத்தை தரம் தாழ்த்துகிறது என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இம்ரான் கான் போட்டுள்ள டிவீட்டில், தாய் ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவர். ஒரு உண்மையான அம்மா அப்படித்தான் இருபார்கள். இந்த பெண்ணிய இயக்கம் என்ற மேற்கத்திய கருத்துகளை நான் முற்றிலும் மறுக்கிறேன். அது தாயின் பாத்திரத்தை தரம் தாழ்த்துகிறது. நான் வளர்ந்தபோது எனது அம்மா என்னில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார் இம்ரான்.

இம்ரான் கானின் இந்த கருத்து சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரின் கருத்து குறித்து ஐமென் புகா என்பவர் தனது ட்விட்டரில் "பெண்ணியவாதிகள் தாயின் பாத்திரத்தை தரம் தாழ்த்துவதில்லை. அவர்கள் அதைக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் அம்மாவின் உரிமையைப் பேசுகிறார்கள். அம்மாவின் அன்றாட பாதுகாப்பையும், பேறுகால விடுப்பையும், அவளின் மறுபேறுக்கான உடல் நலத்தையும் பற்றி பேசுகிறார்கள். உங்களின் கருத்து அவர்களின் ஊழியத்துக்கு இரட்டைச் சுமை" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே போல அப்பாஸ் நசீர் என்பவர் குறிப்பிடுகையில், "இம்ரான்கானின் பெண்ணியம் பற்றிய பார்வை அவருடைய பிழையான புரிதலைக் காட்டுகிறது. அவர் சிறிதளவே அறிந்த விழிப்புணர்வு பெற்ற விஷயங்களில் கருத்து தெரிவிப்பதில்லை அல்லது பேசுவதில்லை என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.
இப்படியான சர்ச்சை விவாதம் ஒரு பக்கமிருக்க, அண்மையில் பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ அதிபர் பர்வேஸ் முஷாரஃப் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில், ஆண்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். பெண்கள் எல்லாவற்றையும் பார்த்தாலும் அமைதியாக இருக்க வேண்டும் குறிப்பிட்டிருந்தார்.
முஷாரஃப்பின் இந்த பிற்போக்குத் தனமான ட்வீட்டுக்கு, இம்ரான்கானின் முன்னாள் மனைவி ரேஹம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.












Click it and Unblock the Notifications