ஆசிய விளையாட்டு போட்டிக்காக தென் கொரியா போன 7 வீரர்களைக் காணவில்லை!
இன்சியான்: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக தென்கொரியா சென்ற வீரர்களில் ஏழு பேரைக் காணவில்லை என சம்பந்தப்பட்ட நாடுகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தென் கொரியாவில் உள்ள இன்சியானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் உலகின் பல நாடுகளில் இருந்தும் வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், நேபாள நாட்டை சேர்ந்த மூன்று வீரர்களும், இலங்கையை சேர்ந்த இரண்டு வீரர்களும், வங்காளதேசம் மற்றும் பாலஸ்தீன நாட்டை சேர்ந்த தலா ஒரு வீரரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள தென்கொரியா வந்தபோது காணாமல் போனதாக இன்சியான் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேற்கூறிய நான்கு நாடுகளின் அணி நிர்வாகிகள் இது தொடர்பாக போட்டிகளை நடத்தும் இன்சியான் நிர்வாகிகளை சந்தித்து புகார் அளித்துள்ளனர். அப்புகாரின் பேரில் தற்போது காணாமல் போன வீரர்களை இன்சியான் போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, காணாமல் போன அந்த ஏழு வீரர்களும் தென்கொரியாவில் சட்டவிரோதமாக வேலை தேடிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு அங்குள்ள இடைத்தரகர்கள் உதவி இருக்கக் கூடும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வரும் அக்டோபர் 19 ந் தேதியுடன் காணாமல் போன வீரர்களின் விசா காலம் முடிவடைவதால், அதன் பிறகு அவர்கள் அங்கு தங்கியிருப்பது சட்டவிரோதமாக கருதப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதே போன்ற சூழ்நிலை கடந்த 2002ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியின் போதும் ஏற்பட்டது. அப்போது 16 வீரர்கள் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications