காசாவில் போர் நிறுத்தத்துக்கான ஐநா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம்.. வாக்களிக்காமல் விலகிய இந்தியா
ஜெனீவா: காசா மீதான இஸ்ரேலின் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஒட்டுமொத்த உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், ஐநா மனித உரிமை கவுன்சிலில் போர் நிறுத்த தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில், இந்தியா வாக்களிக்காமல் விலகியுள்ளது.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தை தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐநா பணியாளர்களை ஏற்றி சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

ஆனால், போர் தற்போதுவரை நிற்கவில்லை. 33,000க்கும் அதிகமானவர்கள் இந்த போரில் உயிரிழந்துள்ளனர். இதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களும், குழந்தைகளும்தான். மட்டுமல்லாது போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில் போர் நிறுத்தம், இஸ்ரேலுக்கான ஆயுத சப்ளை நிறுத்தம், பாலஸ்தீன சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தி, 4 தீர்மானங்களை பாகிஸ்தான், ஐநா மனித உரிமை கவுன்சிலில் முன்வைத்தது. இந்த தீர்மானத்திற்கு எதிராக வழக்கம் போல அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட 4 மேற்கு நாடுகள் வாக்களித்தன. ஆனால் மறுபுறம், பங்களாதேஷ், சீனா, மாலத்தீவுகள், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா என 28 நாடுகள் இதற்கு ஆதரவாக வாக்களித்தன.
இந்த தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இஸ்ரேல், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல்களை பாகிஸ்தானின் தீர்மானம் கண்டிக்க தவறிவிட்டது என்றும், 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதற்கு ஹமாஸ்தான் காரணம் என்பதை சுட்டிக்காட்ட தவிறிவிட்டது என்றும் கூறி இந்த அமர்விலிருந்து வெளியேறிவிட்டது. இறுதியாக பெரும்பான்மை வாக்குகளுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தின்படி, காசா மீதான சட்டவிரோத முற்றுகையை காசா உடனடியாக நீக்க வேண்டும், உடனடி போர் நிறுத்தம், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பிற இராணுவ உபகரணங்களின் விற்பனை, பரிமாற்றம் ஆகியவற்றை தடுத்தல், பட்டிணியிலிருந்து மக்களை மீட்டெடுத்தல் போன்றவற்றை இஸ்ரேல் உடனடியாக செய்ய வேண்டும்.
இந்தியாவை பொறுத்த அளவில், பாகிஸ்தான் கொண்டு வந்த 4 தீர்மானங்களில், போர் நிறுத்தம் குறித்த தீர்மானத்தை தவிர 3 தீர்மானத்திற்கு ஆதரவளித்தது. 4வது தீர்மானத்திற்கு இந்தியா ஆப்சென்ட் ஆனது.
எப்படி இருப்பினும் போர் நிறுத்தமும், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் மறுவாழ்வும் தான் காசாவை மீட்டெடுக்கும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
-
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்!












Click it and Unblock the Notifications