ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பினர் பதவி... ஆப்கனை 'ஆப்' செய்து விட்டு இந்தியா போட்டி!

ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பினர் பதவியிலிருந்து இந்தியாவின் பணி முடிந்து ஒரு ஆண்டு கூட முடியாத நிலையில், மீண்டும் உறுப்பினர் பதவிக்கு இந்தியா போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
இந்த உறுப்பினர் பதவியானது 2021-22ம் ஆண்டுக்கானது. முதலில் இந்தப் பதவிக்கு ஆப்கானிஸ்தான் மனு செய்திருந்தது. ஆனால் தற்போது இந்தியாவுக்கு ஆதரவாக ஆப்கானிஸ்தான் விலகியிருக்கிறது. இதையடுத்தே இந்தியா போட்டியிட களத்தில் குதித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி அசோக் குமார் முகர்ஜி கூறுகையில், நாங்கள் போட்டியிட மனு செய்துள்ளோம். தேர்தல் 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறும் என்றார்.
கடைசியாக 2011-2012 ஆண்டுக்கான உறுப்பினர் பதவியை இந்தியா வகித்தது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே, இந்தியா கேட்டுக் கொண்டதால்தான் ஆப்கானிஸ்தான் போட்டியிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்தில் காபூலில் ரகசியப் பேச்சுக்கள் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானுக்கு பல்வேறு வழிகளில் இந்தியா உதவி செய்து வரும் நிலையில் தற்போது இந்தியாவுக்கு ஆதரவாக ஆப்கானி்ஸ்தான் விலகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications