செவ்வாய்க்கு செயற்கைக்கோள் அனுப்பிய முதல் ஆசியநாடு இந்தியா: சீனா புகழாரம்
பெய்ஜிங்: ‘மங்கள்யான்' செயற்கைக் கோளை அனுப்பியதன் மூலம், செவ்வாய்க்கு செயற்கைக் கோள் அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளதாக சீன விஞ்ஞானிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
நேற்று முந்தினம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளனவா என்பது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக ‘மங்கள்யான்' செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இந்தியா.
இதனை பாராட்டும் வகையில், செவ்வாய் கிரகம் பற்றிய ஆராய்ச்சியில் சீனாவை விட இந்தியா முன்னோக்கி செல்கின்றது என்று சீன பத்திரிக்கையில் முதல் பக்க செய்திகள் வந்துள்ளன. மேலும், அதில் அந்நாட்டு விஞ்ஞானிகளின் கருத்துகளும் இடம்பெற்றிருந்தன.
அதில், சீனா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளதாவது...

உலக அரங்கில்....
செவ்வாய் கிரகத்திற்கு ஆசியாவிலேயே முதன்முதலில் மங்கள்யான் செயற்கைக்கோளை ஏவி இந்தியா மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இது உலக அரசியல் வட்டாரத்தில் இந்தியாவிற்கு செல்வாக்கை கொண்டு வந்துள்ளது. இந்த சாதனையை உலக நாடுகள் வாழ்த்துகின்றன.

சாதனை....
செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் மங்கள்யான் செயற்கைக்கோள் இணைந்து விட்டால், அது டோக்கியோவில் இருந்து அடிக்கப்படும் கோல்ப் பந்தானது பாரிசில் உள்ள துளையில் வந்து விழுவதற்கு நிகரான ஒரு சாதனையாகும்.

மாற்றம்....
இந்த செயற்கைகோள் வெற்றிகரமாக செயல்படுமானால், மனிதகுலத்திற்கு புதிய தகவல்களையும், நமது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தையும் கொண்டுவரும்.

ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்...
சீனர்களை போன்றே, இந்திய மக்களும் விண்வெளி பற்றிய ஆய்வை ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். விண்வெளி ஆராய்ச்சியில் போட்டியிடாமல், இந்தியாவும் சீனாவும் ஒன்றாக இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒத்துழைப்பு....
மனித குலத்திற்கு சொந்தமான விண்வெளியில் அமைதி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications