மாலி ஹோட்டல் தாக்குதலில் இந்திய அமெரிக்க பெண் அனிதா தட்டார் பலி
வாஷிங்டன்: மாலி நாட்டு ஹோட்டலை சிறை பிடித்த தீவிரவாதிகளுக்கும், மீட்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதல் மற்றும் சண்டையில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் இந்திய அமெரிக்கர் அனிதா தட்டாரும் ஒருவர் எனத் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், மாலி தாக்குதலில் பலியானவர்களில் அமெரிக்கக் குடிமக்கள் ஒருவர் மட்டுமே. அவர் இந்திய அமெரிக்கர் அனிதா தட்டார் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறுகையில், அனிதா தட்டாரின் மரணத்திற்காக நாங்கள் துயரப்படுகிறோம். அவருக்காக இரங்குகிறோம். மாலி தாக்குதலில் உயிரிழந்த அனைத்து உயிர்களுக்கும் நாங்கள் அனுதாபப்டுகிறோம் என்றார்.
இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக துணை நிற்கும் மாலி மக்களுக்கு நன்றி என்றும் கெர்ரி தெரிவித்துள்ளார்.
அனிதாவின் மரணத்தால் அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். மாலியின், பமோகாவில் உள்ள ரேடிசன் புளூ ஹோட்டலைக் கைப்பற்றிய தீவிரவாதிகள் அங்கிருந்த 170 பேரை சிறை பிடித்தனர். இதில் 22 பேர் இந்தியர்கள் ஆவர். சிறை பிடிக்கப்பட்டவர்களில் 27 பேரை தீவிரவாதிகள் ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தனர்.
22 இந்தியர்கள் உள்பட மற்ற அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த துயரத்தைத் தொடர்ந்து மாலி அரசு பத்து நாள் அவசர நிலையை தனது நாட்டில் அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு அல்ஜீரியாவை ஆட்டிப்படைத்து வரும் தீவிரவாதி மோக்தர் பெல்மோக்தர் தலைமையிலான அல் முரபுதியான் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications