For Daily Alerts
Just In
மாயமான விமானத்திலிருந்த 5 இந்தியர்கள்.. குடும்பத்தினருக்கு உடனுக்குடன் தகவல் தரும் தூதரகம்
கோலாலம்பூர்: மலேசியாவிலிருந்து புறப்பட்டு சீனா செல்லும் வழியில் நடு வழியில் காணாமல் போய் விட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஐந்து இந்தியர்களின் குடும்பத்தினரும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அவர்களுடன் இந்திய தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.
மலேசியா மற்றும் சீனாவில் உள்ள இந்தியத் தூதரகங்கள், இந்தியர்களின் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, உடனுக்குடன் விமானம் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் விமானத்தில் பயணித்த அத்தனை பேரும் நலமுடன் மீண்டும் திரும்ப வேண்டும் என்றும் மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் சார்பில் சிறப்புப் பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
மலேசிய அரசு இந்த விவகாரத்தில் நல்லமுறையில் செயல்பட்டு வருவதாகவும், இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
English summary
Indian embassies in Malysia and China are keep in touch with the families of the missing Indians in MA flight.
Story first published: Tuesday, March 11, 2014, 17:17 [IST]