பாக். நண்பருடன் சேர்ந்து மனைவியைக் கொன்ற இந்தியருக்கு மரண தண்டனை.. துபாயில்
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்து வரும் ஒரு இந்தியர், தனது பாகிஸ்தான் நண்பருடன் சேர்ந்து மனைவியைக் கொன்ற குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். இருவருக்கும் துப்பாக்கியால் சுட்டு தண்டனைடைய நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
துபாய் உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது. கொல்லப்பட்ட பெண்ணும் இந்தியர்தான். மனைவியைக் கொன்றதாக குற்றச்சாட்டுக்குள்ளான நபருக்கும், பிலிப்பைன்ஸ் பெண் ஒருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதுகுறித்து கணவரிடம் கேட்டுள்ளார் மனைவி. இதனால் கோபமடைந்த கணவர் மனைவியைக் கொலை செய்து விட்டார். இதற்கு அவரது பாகிஸ்தான் நண்பரும் உடந்தையாக இருந்துள்ளார்.

அந்த இந்தியரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அவரை ஏக்யூ என்றும், பாகிஸ்தான் நண்பரை ஆர்ஏ என்றும் துபாய் போலீஸார் கூறியுள்ளனர். இந்தக் கொலை 2013ம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அதை தற்போது துபாய் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
அல் புக்கா என்ற பகுதியில் இந்தக் கொலை நடந்தது. மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்றதும், தனது பாகிஸ்தான் நண்பருடன் சேர்ந்து உடலை பெரிய பையில் அடைத்து தூக்கி் போட்டுள்ளார் ஏக்யூ.
இந்த விவகாரம் குறித்து ஏக்யூவின் தந்தை கூறுகையில், எனது மகன் குறித்து எனது மருமகள் தொடர்ந்து எனக்குப் போன் செய்து புகார் கூறி வந்தார். தன்னை கணவர் ஏமாற்றி விட்டதாகவும், பிலிப்பைன்ஸ் பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளதாகவும் அவர் கூறி வந்தார். ஆனால் இப்படிக் கொலை செய்யும் அளவுக்கு எனது மகன் போவான் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றார்.
தற்போது ஏக்யூ மற்றும் ஆர்ஏ ஆகிய இருவரையும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றவுள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications