குவைத், துபாயில் இந்திய சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்
குவைத்: குவைத்தில் இந்தியாவின் 69வது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
குவைத் நாட்டுக்கான இந்திய தூதர் சுனில் ஜெயின் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். இந்திய குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரையினை வாசித்தார். இந்திய தூதரகம் குவைத்தில் வாழ்ந்து வரும் இந்திய மக்களுக்கு மேற்கொண்டு வரும் பணிகள் பர்றி விவரித்தார்.

இந்த விழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் கலந்து கொண்டனர்.
துபாய்:
துபாய் இந்திய துணை தூதரகத்தில் இந்திய சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்திய துணை தூதர் அனுராக் பூஷன் இந்திய தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். இந்திய குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரையினை அவர் வாசித்தார்.

அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications