அமெரிக்காவில் இந்தியர் மீது கொடூர இனவெறி தாக்குதல்! ரத்த வெள்ளத்தில் மிதந்தவர் மீட்பு!!
Subscribe to Oneindia Tamil
நியூஜெர்சி: அமெரிக்காவில் நியூஜெர்சியில் இந்தியரான ரோஹித் படேல் என்பவர் மீது கொடூரமாக இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலை நடத்திய குற்றவாளி உடனடியாக ஜாமீனில் விடப்பட்டுள்ளான்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியை சேர்ந்தவர் 57 வயது இந்தியரான ரோஹித் படே. இவர் சாலையில் நடைபயிற்சிக்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மர்மநபர் ஒருவன் ரோஹித் படேலை வழிமறித்து சரமாரியாக அடித்து உதைத்தான். இதனால் அவரது முகம், தலை மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. பற்கள் உடைந்தன.
ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தியர் என்பதால் அவர் மீது இனவெறி தாக்குதல் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளார்.
அவரை தாக்கிய நபர் கில்கோர் என்பவன் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே ஜாமீனில் விடப்பட்டான்.












Click it and Unblock the Notifications