இங்கிலாந்தின் சிறந்த மாணவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் தேர்வு

இங்கிலாந்தில் உள்ள லங்காஷயரில் இருக்கும் பர்ன்லீயில் தனது தாய் சுஜாதாவுடன் வசித்து வருபவர் அசானிஷ் கல்யாணசுந்தரம்(18). அவர் புனித ஜோசப் பார்க் ஹில் பள்ளியில் படித்து வருகிறார். அவர் பள்ளி இறுதித் தேர்வான ஏ லெவல் தேர்வில் கணக்கு, இயற்பியல், வேதியல், உயிரியல் மற்றும் நெருக்கடியான சிந்தனை என்ற 5 பாடங்களிலும் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
இங்கிலாந்தில் நடக்கும் இந்த ஏ லெவல் தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100 சதவீத மதிப்பெண்கள் பெறுவது மிகவும் கடினமாகும். அப்படி இருக்கையில் அனைத்து பாடங்களிலும் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ள அசானிஷ் இங்கிலாந்தின் சிறந்த மாணவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் வரும் அக்டோபர் மாதம் மருத்துவம் படிக்க கல்லூரிக்கு செல்கிறார்.
அவருக்கு அறுவை சிகிச்சை நிபுணராக ஆசை உள்ளது. ஆனால் எந்த துறையில் நிபுணர் ஆவது என்பது குறித்து அவர் இன்னும் முடிவு செய்யவில்லை.
அசானிஷ் அண்மையில் தான் ட்யூக் ஆப் எடின்பர்க்கின் தங்க பதக்க விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து வரும் நவம்பர் மாதம் லண்டனில் உள்ள புனித ஜேம்ஸ் அரண்மனையில் நடக்கும் விழாவில் அவர் அந்த விருதை இளவரசர் பிலிப் கையால் பெறுகிறார்.












Click it and Unblock the Notifications