யு.கே.: நிர்வாணமாக பிஎம்டபுள்யூ கார் ஓட்டி சிக்கிய இந்திய வம்சாவளி நபர்
லண்டன்: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் சிறை பாதுகாவலர் நிர்வாணமாக கார் ஓட்டியதால் அவர் 6 மாத காலம் எந்த வாகனமும் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆனந்த் சிங்(37). முன்னாள் சிறை பாதுகாவலர். அவர் நிர்வாணமாக தனது பிஎம்டபுள்யூ காரில் சாலையில் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த பேருந்து அருகே தனது காரை நிறுத்தியுள்ளார்.
பேருந்தில் இங்கிலாந்துக்கு சுற்றுலா வந்த பிரான்சை சேர்ந்த பள்ளிக் குழந்தைகள் இருந்தனர். அவர்கள் ஆனந்த் சிங் நிர்வாணமாக இருப்பதை தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர். இது தொடர்பாக ஆனந்த் மீது வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த கான்டர்பரி கிரவுன் நீதிமன்றம் ஆனந்துக்கு ரூ. 20 ஆயிரத்து 500 அபராதம் விதித்ததுடன் அவர் எந்த வாகனமும் ஓட்ட 6 மாத கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் மனோதத்துவ நிபுணர்களை அணுகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனந்த் இதற்கு முன்பும் இரண்டு முறை காரில் இருந்தபடியே ஆடையை அவிழ்த்து சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.