Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடத்தையில் சந்தேகம்... சிங்கப்பூரில் மனைவியை அடித்த ‘போதை’ இந்தியருக்கு 12 வாரங்கள் சிறை

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: தனது மனைவியை நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து கொடுமை படுத்திய இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு 12 வாரங்கள் சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்திரஜித் சிங், தனது மனைவி அம்ரிதா மற்றொருவருடன் கள்ளத்தொர்டர்பு வைத்துள்ளார் என சந்தேகப் பட்டுள்ளார். ஆனால், அவரது குற்றச்சாட்டை அம்ரிதா மறுத்துள்ளார். இதனால் அவர்கள் இருவரிடையே சண்டை நடந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதம் குடித்து விட்டு வீட்டுக்கு வந்த இந்திரஜித் மோட்டார் சைக்கிள் புகைப்போக்கி பைப்பை கொண்டு தனது மனைவியைக் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அவரது மனைவியின் கை எலும்பு உடைந்தது.

இது தொடர்பாக சிங்கப்பூர் கோர்ட்டில் இந்திரஜித்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனைவியைக் கடுமையாக தாக்கியதற்காக இந்திரஜித்திற்கு 12 வாரம் சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட போது மது போதையில் இருந்த இந்திரஜித் சிங் போலீஸ் அதிகாரிகளுடனும் தகராறில் ஈடுபட்டுள்ளார். எனவே, அந்த குற்றத்திற்காக அவருக்கு 2000 சிங்கப்பூர் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+