நடத்தையில் சந்தேகம்... சிங்கப்பூரில் மனைவியை அடித்த ‘போதை’ இந்தியருக்கு 12 வாரங்கள் சிறை
சிங்கப்பூர்: தனது மனைவியை நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து கொடுமை படுத்திய இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு 12 வாரங்கள் சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்திரஜித் சிங், தனது மனைவி அம்ரிதா மற்றொருவருடன் கள்ளத்தொர்டர்பு வைத்துள்ளார் என சந்தேகப் பட்டுள்ளார். ஆனால், அவரது குற்றச்சாட்டை அம்ரிதா மறுத்துள்ளார். இதனால் அவர்கள் இருவரிடையே சண்டை நடந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதம் குடித்து விட்டு வீட்டுக்கு வந்த இந்திரஜித் மோட்டார் சைக்கிள் புகைப்போக்கி பைப்பை கொண்டு தனது மனைவியைக் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அவரது மனைவியின் கை எலும்பு உடைந்தது.
இது தொடர்பாக சிங்கப்பூர் கோர்ட்டில் இந்திரஜித்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனைவியைக் கடுமையாக தாக்கியதற்காக இந்திரஜித்திற்கு 12 வாரம் சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட போது மது போதையில் இருந்த இந்திரஜித் சிங் போலீஸ் அதிகாரிகளுடனும் தகராறில் ஈடுபட்டுள்ளார். எனவே, அந்த குற்றத்திற்காக அவருக்கு 2000 சிங்கப்பூர் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications