அமெரிக்க சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... நாடு கடத்தப்படுகிறார் இந்திய பாதிரியார்
வாஷிங்டன்: அமெரிக்காவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை ... இந்திய பாதிரியார் ஒருவர் நாடு கடத்தப்பட உள்ளார்.
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியாராக இருந்தவர் இந்தியாவைச் சேர்ந்த லியோ சார்லஸ் கொப்பளா (47). ஆந்திராவின் நெல்லூரைப் பூர்வீகமாகக் கொண்ட சார்லஸ் கடந்தாண்டு ஜூன் மாதம் 12 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கைது செய்யப்பட்டார்.
விருந்துக்கு சென்ற இடத்தில் சிறுமிக்கு முத்தம் தந்ததாக சார்லஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தபோது பாதிரியார் லியோ தன்மீதான குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டார்.
பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட பாதிரியாருக்கு 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க அமெரிக்க சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்து, 25 ஆண்டு காலம் நன்னடத்தை மேற்பார்வையில் வைக்க உத்தரவிட்டது.
தண்டனையை தொடர்ந்து பாதிரியார் லியோ, உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications