For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தம்மாமில் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம்!

By Siva
Google Oneindia Tamil News

தம்மாம்: சவுதி அரேபியா தம்மாம் மண்டல கிழக்கு மாகாண தமிழ் பிரிவின் சார்பில் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் 06.09.2014 அன்று மாலை தலைவர் மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி தலைமையில் நடைபெற்றது.

பொது செயலாளர் திப்பு சுல்தான் மாதாந்திர செயல் திட்ட அறிக்கையை சமர்ப்பித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1: நிகழ்ச்சி தொடர்பான செய்திகளை தமது இணைய ளங்களில் வெளியிட்டு வரும் அனைத்து ஊடக பொறுப்பாளர்களுக்கும் தமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

2: அனைத்து கிளைகளிலும் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது.

3: பணி நிமித்தமாக சவுதி அரேபியாவுக்கு வந்துள்ள இந்திய மக்களின் குறிப்பாக தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகளை கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளும், சட்ட உதவிகளும் வழங்குவது.

4: வரும் 26.09.2014(வெள்ளிக்கிழமை)மாலை 6.30 மணியளவில் தம்மாம் மாநகரில் "நாம் முன்னோக்கி செல்வோம்"என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் நடத்துவது என்றும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் சிஹாத் கிளை நிர்வாகிகள் மக்தூம் நைனா, ஷமீம்,உமர் கத்தாப்,அல் ஜுபைல் கிளை நிர்வாகிகள் அய்யம் பேட்டை அன்சாரி,புதுப்பேட்டை ஆஷிக், தம்மாம் கிளை நிர்வாகிகள் குதுபுதீன்,சம்சுதீன்,அல்கோபார் கிளை நிர்வாகிகள் ஷேக் முகைதீன்,அப்துல் காதர் உள்ளிட்ட உயர்மட்ட குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

English summary
Indian Social Forum's high level committee meet was held in Dammam on september 6th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X