டெக்சாஸ் புயலில் சிக்கிய இந்திய மாணவி ஷாலினி சிங் மருத்துவமனையில் மரணம்
டெக்சாஸ் புயலில் சிக்கிய இந்திய மாணவி ஷாலினி சிங் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மரணமடைந்தார்.
ஹூஸ்டன்: அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டனில் கோரத்தாண்டவம் ஆடிய ஹார்வி புயலில் சிக்கி மீட்கப்பட்ட இந்திய மாணவி ஷாலினி சிங் சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அமெரிக்காவில் டெக்சாஸ், ஹூஸ்டன் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழையுடன் கூடிய ஹார்வி புயல் வீசியது.

ஹார்வி புயலுக்கு 1.3 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். டெக்சாஸ், ஹூஸ்டன் பகுதிகளில் மட்டும் சுமார் 1.5 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள பல்கலையில் படித்து வரும் இந்திய மாணவர்கள் 200 பேர் புயலில் சிக்கி தவித்தனர். இதில் ஷாலினி சிங் என்ற மாணவியும், நிகில் பாட்டியா என்ற மாணவரும் நீந்தி தப்ப முயன்றனர். ஆனால் அவர்கள் வெள்ளத்தில் சிக்கி ஏரியில் மூழ்கினர்.
இதையடுத்து மீட்பு படையினர் விரைந்து சென்று உயிருக்கு போராடிய நிலையில் இருந்த இருவரையும் மீட்டனர். இதில் நிகில் பாட்டியா கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த சூழ்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஷாலினி சிங் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications