துபாயில் நடைபெற்ற இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் கடந்த 26ம் தேதி இந்திய குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
துபாயில் உள்ள இந்திய கன்சுலேட்டின் சார்பில் இந்திய குடியரசு தின விழா 26.1.2015 அன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. துபாயில் உள்ள இந்தியப் பள்ளியில் நடந்த விழாவில் இந்திய கன்சல் ஜெனரல் அனுராக் பூஷன் கலந்து கொண்டு இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.

அவர் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் குடியரசு தின உரையினை வாசித்தார். இதைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியரின் கண்கவரும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இந்தியர்கள் கலந்து கொண்டு பெருமை அடைந்தனர்.












Click it and Unblock the Notifications