எபோலா வைரஸ் பரவியுள்ள லைபீரியாவில் சிக்கி நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் இந்தியர்கள்
மான்ரோவியா: எபோலா வைரஸ் பரவி வரும் லைபீரியாவில் சிக்கியுள்ள இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, நைஜீரியா, சியர்ரா லியோன், கினியாவில் எபோலா வைரஸ் பரவி வருகிறது. இந்த நாடுகளில் எபோலா வைரஸ் தாக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதிலும் லைபீரியாவில் மட்டும் இதுவரை 413 பேர் பலியாகியுள்ளனர்.

எபோலா வைரஸுக்கு பயந்து லைபீரியா மற்றும் சியர்ரா லியோனுக்கான விமான சேவையை பல நாட்டு விமான நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. லைபீரிய தலைநகர் மான்ரோவியா மற்றும் சியர்ரா லியோன் தலைநகரான ஃப்ரீடவுன் ஆகியவற்றுக்கான விமான சேவையை இன்றில் இருந்து நிறுத்தியுள்ளது கென்யா ஏர்வேஸ். ப்ருஸெல்ஸ் ஏர்லைன்ஸ் மட்டுமே தற்போது முழு சேவையை வழங்கி வருகிறது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ், எமிரேட்ஸ், பான் ஆப்பிரிக்கன் ஏர்லைன் ஏ.எஸ்.கே.ஒய் மற்றும் உள்ளூர் விமான நிறுவனங்கள் குறிப்பிட்ட விமானங்களை மட்டுமே இயக்கி வருகின்றன. இப்படி விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் லைபீரியாவில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்.
ஒரு புறம் எபோலா வைரஸ் தாக்கிவிடுமோ என்ற பயம், மறுபுறம் விமான சேவை இல்லாமல் இங்கிருந்து எப்படி வெளியேறுவது என்ற கலக்கத்தில் உள்ளனர் இந்தியர்கள். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் சுமார் 45 ஆயிரம் இந்தியர்கள் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications