அமெரிக்க ராணுவ நிலைகள் மீதான தாக்குதல் தொடரும்.. ஈரானின் புதிய தலைவர் அறிவிப்பு!
தெஹ்ரான்: ஈரானின் தலைவராக இருந்த காமெனி சமீபத்தில் கொல்லப்பட்டார். இதனையடுத்து அவரது மகன் 'மொஜ்தபா காமெனி', புதிய தலைவராக பொறுப்பேற்றிருந்த நிலையில், தற்போது முதல் முறையாக நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளார். தனது உரையில், அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் தொடரும் என்று கூறியிருக்கிறார்.
ஈரானின் பக்கத்து நாடுகளில் அமெரிக்காவின் ராணுவ நிலைகள் இருக்கின்றன. இதனை குறி வைத்தும், அமெரிக்க ராணுவத்திற்கு உதவும் பொருளாதார நிலைகள் மீதும் ஈரான் சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதல், பக்கத்து நாடுகளின் மீதான நேரடி தாக்குதலாக பார்க்கப்பட்டது. இப்படி இருக்கையில், இது குறித்து 'மொஜ்தபா காமெனி' விளக்கமளித்திருக்கிறார். விளக்கத்தில், நாங்கள் பக்கத்து நாடுகளை தாக்கவில்லை. மாறாக, அங்கு இருக்கும் அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீதுதான் தாக்குதல் நடத்தி வருகிறோம். இந்த தாக்குதல் மேலும் தொடரும் என்று கூறியிருக்கிறார்.
மேலும் அவர் கூறியதாவது, "மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அனைத்து ராணுவ தளத்தையும் அமெரிக்கா உடனடியாக மூட வேண்டும். எங்களின் எதிரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, ஹர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். அதேபோல போரில் கொல்லப்பட்ட ஈரானிய அப்பாவி மக்களுக்காக பழி வாங்கப்படும். அமெரிக்காவிடமிருந்து இழப்பீடு பெறும் வரை இந்த போர் தொடரும்" என்று கூறியிருக்கிறார்.
பிப்ரவரி 28 அன்று தெஹ்ரானில் நடைபெற்ற அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில், மொஜ்தபா காமெனியின் தந்தை கொல்லப்பட்டபோது, மொஜ்தபா காமெனி காயமடைந்ததை ஈரானிய அதிகாரிகள் கூறியிருந்தனர். இதனையடுத்து 88 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்கள் சபையால் மோஜ்தபா தலைமைப் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க 20,000 கி.மீ தூரத்திலிருந்து உதவும் இந்திய நட்பு நாடு! -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை












Click it and Unblock the Notifications