பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் பல்பு கொடுக்கும் ஈரான்.. ஒரே கண்டிஷன் - டிரம்ப்-க்கு அடுத்த செக்
அமெரிக்கா - ஈரான் மத்தியிலான பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் அரசு மிகப்பெரிய அளவில் ஏற்பாடுகளை செய்து வரும் வேளையில் ஈரான் அரசு ஊடகங்கள் வெள்ளிக்கிழமை அதிரடியாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
அமெரிக்காவுடன் இஸ்லாமாபாத்தில் நாளை நடைபெற இருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக ஈரான் உயர் அதிகாரிகள் யார் வருகிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், ஈரானின் இரு முக்கிய தலைவர்கள் பாகிஸ்தான் சென்றதாக வெளியான செய்திகளை முழுமையாக மறுத்துள்ளது ஈரான் அரசு.
இந்த மறுப்பு, இரு நாடுகளுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பதில் புதிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்த திடீர் மனமாற்றத்திற்கு முக்கிய காரணம் லெபனான்.

ஈரான் ஊடகங்கள் விளக்கம்
தஸ்னிம் நியூஸ் ஏஜென்சி (Tasnim News Agency) வெளியிட்ட அறிக்கையின்படி, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறவே இல்லை. இருவரும் தெஹ்ரானில் தங்கள் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர் என்று நன்கு அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் 'ஈரான் பேச்சுவார்த்தைக் குழு இஸ்லாமாபாத் சென்று அமெரிக்காவுடன் பேச்சு நடத்த தயாராக உள்ளதாக சில ஊடகங்கள் வெளியிட்ட செய்தி முழுமையாக தவறானது' என்று தஸ்னிம் தெளிவாகக் கூறியுள்ளது. இந்த மறுப்பு தொடர்பான செய்தியை ஈரான் அரசு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது.
லெபனான் மையப்புள்ளி
ஈரான் தரப்பு தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 'அமெரிக்கா லெபனானில் போர் நிறுத்தத்துக்கான தனது உறுதிமொழியை நிறைவேற்றாத வரை, இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கும் வரை பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன' என்று ஈரான் அரசு வட்டாரம் தெரிவித்துள்ளதாக தஸ்னிம் விளக்கியுள்ளது.
இதே நிலைப்பாட்டை ஃபார்ஸ் நியூஸ் ஏஜென்சியும் (Fars News Agency) உறுதிப்படுத்தியுள்ளது. 'லெபனானில் போர் நிறுத்தம் உறுதி செய்யப்படாத வரை அமெரிக்க தரப்புடன் பேச்சு நடத்த எந்தத் திட்டமும் இல்லை' என்று ஃபார்ஸ் தெரிவித்துள்ளது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை
அமெரிக்க ஊடகமான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வியாழக்கிழமை இரவு ஈரான் அரசு தரப்பு குழு இஸ்லாமாபாத் வந்துவிட்டதாகக் கூறியிருந்தது. ஆனால் ஈரான் அரசு இந்த அறிக்கையை முழுமையாக பொய் என்று நிராகரித்துள்ளன. ஈரான் தரப்பு பாகிஸ்தானுக்கு தெளிவான செய்தியை அனுப்பியுள்ளது. 'லெபனான் போர் நிறுத்தத்தில் அமெரிக்கா தனது பொறுப்பை நிறைவேற்றாவிட்டால் ஈரான் குழு இஸ்லாமாபாத் செல்லாது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானில் அமைதி ஏற்படாமல் அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்த முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டை ஈரான் வெளிப்படுத்தியுள்ளது. இது மேற்கு ஆசியப் பகுதியில் நிலவும் பதற்றத்தை நாளுக்கு நாள் சிக்கலாக்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இந்தப் பேச்சுகளில் விவாதிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், லெபனான் பிரச்சனை பெரியதாக வெடித்துள்ளது.
இதற்கிடையில் இஸ்ரேல் லெபனான் நாட்டின் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது மூலம் பலர் உயிரிழந்துள்ளனர்.
-
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
ஹர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்த புதிய யுக்தி! வியூகத்தை மாற்றிய ஈரான்! சுப்ரீம் லீடர் கொடுத்த மெசேஜ்! -
"ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கிறோம்.." ஈரான் அறிவிப்பு.. ஓவர்நைட்டில் முடிவுக்கு வந்த வளைகுடா போர் -
வளைகுடா நாடுகளில் அமைதி.. இந்தியர்களுக்கு பெரிய நிம்மதி! ஈரான் எடுத்த நடவடிக்கை! -
"அமெரிக்காவை ஓடவிட்டோம்.. இஸ்ரேலை வீழ்த்திவிட்டோம்.." விடிய விடிய கொண்டாடிய ஈரான் மக்கள் -
போர் நிறுத்தத்திற்கு காரணம் பாகிஸ்தானா? வெளியான முக்கிய தகவல்.. உள்ளே புகுந்து விளையாடிய சீனா! -
Trump: எல்லாரும் ரெடியா இருங்க.. அடுத்த அட்டாக் பலமா இருக்கணும்.. ஈரானுக்கு எதிராக புது அறிவிப்பு! -
டிரம்ப் அடங்கவே மாட்டார் போல.. "இதுவரை கண்டிராத தாக்குதல் இருக்கு!" ஈரானுக்கு புதிய எச்சரிக்கை -
ஈரான் உச்சகட்ட வார்னிங்.. ஹார்முஸ் முழுக்க கண்ணிவெடி வச்சிருக்கோம்.. அந்த பக்கம் போகாதீங்க! -
டிரம்ப்-ன் அடுத்த டார்கெட்.. மீண்டும் கிரீன்லாந்து.. NATO நாடுகளை மிரட்டும் அமெரிக்கா! -
காபி பேஸ்ட் பாகிஸ்தான்.. அமெரிக்கா சொன்னதை அப்படியே திரும்ப சொன்ன ஷெரீப்? வெடித்த சர்ச்சை -
யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க.. குவைத் வாழ் இந்தியர்களே உஷார்! முக்கிய உத்தரவு -
எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் நெதன்யாகு.. லெபனானை தொடர்ந்து தாக்குவோம் என இஸ்ரேல் திட்டவட்டம் -
தங்கம், வெள்ளி விலையில் தடாலடி உயர்வு.. அப்போ சென்னை மார்கெட்டில் 'தீபாவளி பரிசு' உண்டு! -
திருப்பூர் டூ நொய்டா.. சொல்லிவச்ச மாதிரி நடக்குதே..!















Click it and Unblock the Notifications