Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தவித்த தாலிபன்கள்... வைத்த கோரிக்கை.. கைகொடுக்க களம் இறங்கிய ஈரான்.. பறக்கும் எரிபொருள்கள்!

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான் : ஆப்கானிஸ்தானுக்கு எரிபொருள் ஏற்றுமதியை தொடங்குமாறு தாலிபன்கள் வைத்த வேண்டுகோளைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஈரான் மீண்டும் தொடங்கியது. இதன் மூலம் ஈரானின் கச்சா எண்ணெய் மீண்டும் ஆப்கானிஸ்தானிற்கு கிடைத்து வருகிறது.

Recommended Video

    கோரிக்கை வைத்த Taliban.. உடனே Oil அனுப்பி வைத்த Iran

    2001ல் ஆட்சியை பறிகொடுத்த தாலிபன்கள், 20 வருட யுத்தத்திற்கு பின்னர் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் படைகளை வாபஸ் பெற்றதால் ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர்,

    20 ஆண்டுகளுக்கு முன்பு தலிபான் ஆட்சியில் இருந்தபோது கடுமையான இஸ்லாமிய சட்டம் மற்றும் பழிவாங்கலுக்கு பயந்து பல ஆப்கானியர்கள் நாட்டை விட்டு தப்பித்தால் பொதும் என்று ஓடுகிறாரகள். குழப்பமான நிலை காரணமாக ஆப்கானிஸ்தானில் பெட்ரோலின் விலை டன்னுக்கு $ 900 ஐ எட்டி உள்ளது.

    எரிபொருள் ஏற்றுமதி

    எரிபொருள் ஏற்றுமதி

    இதனால் விலைவாசி உயர்வை எதிர்கொள்ளும் பொருட்டு, தாலிபன்கள், ஈரானிடம் வர்த்தகர்களுக்கு எல்லைகளை திறந்து வைக்குமாறு வேண்டுகோள்வைத்தனர். தாலிபான் ஈரானுக்கு அனுப்பிய செய்தியில், நீங்கள் பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதியைத் உடனே தொடரலாம் என்று கூறியுள்ளதுடன், பாதுகாப்பு உத்தரவாதம் அளித்துள்ளனர். இந்த தகவலை தெஹ்ரானில் உள்ள ஈரானின் எண்ணெய், எரிவாயு மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்கள் ஏற்றுமதியாளர் சங்கத்தின் வாரிய உறுப்பினரனா ஹமீத் ஹொசைனி கூறினார்.

    விலகல்

    விலகல்

    ஆகஸ்ட் 6 முதல் ஈரானின் வர்த்தகப் பாதுகாப்பு குறித்த கவலையின் காரணமாக பெட்ரோல் உள்ளிட்ட கச்சா எண்ணெய் பொருட்களை ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய ஈரான் அரசு தடை விதித்து இருந்தது. ஆனால் தற்போது தலிபான்களின் அணுகுமுறையால் அந்த தடைகள் தளர்த்தப்பட்டுள்ளன என்று ஹமீத் ஹொசைனி கூறினார்.

    குறைத்தது ஆப்கான்

    குறைத்தது ஆப்கான்

    ஈரான் மற்றும் பிற அண்டை நாடுகளின் எரிபொருள் இறக்குமதிக்கான கட்டணங்களை குறைப்பதற்கான தலிபான்களின் முடிவையும் அவர் மேற்கோள் காட்டினார், ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட் வழங்கிய அதிகாரப்பூர்வ ஆவணத்தையும் ஊடகத்திடம் வெளியிட்டார். அண்டை நாடுகளில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி இறக்குமதிக்கான கட்டணங்களுக்கு 70 சதவீத தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.

    ஈரானுக்கு அமெரிக்கா தடை

    ஈரானுக்கு அமெரிக்கா தடை

    உலகின் நான்காவது பெரிய எண்ணெய் இருப்புக்களைக் கொண்டுள்ள நாடு ஈரான் ஆகும். ஆனால் 2018 இல் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த தடைகள் காரணமாக ஈரானிய எண்ணெய் ஏற்றுமதி கணிசமாகக் குறைத்து இருந்தது. ஆனாலும் ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுக்கு எரிபொருளை ஏற்றுமதி செய்வதை தொடர்கிறது.

    20000 பீப்பாய்கள்

    20000 பீப்பாய்கள்

    ஆப்கானிஸ்தானுக்கு ஈரான் பெட்ரோலை தான் அதிகம் ஏற்றுமதி செய்துள்ளது. மே 2020 முதல் மே 2021 வரை ஈரான் சுமார் 400,000 டன் எரிபொருளை தனது அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஒரு நாளைக்கு 20,000 பீப்பாய்களுக்கு மேல், ஈரானிய எரிபொருள் ஆப்கானிஸ்தானுக்கு செல்கிறது. அண்டை நாடுகளான துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கும் எரிபொருளை ஈரான் ஏற்றுமதி செய்து வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+