Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா வைரசால் குபீரென்று கிடைத்த வாழ்வு.. ரிலீசாகும் 54,000 சிறைக் கைதிகள்.. என்ன நடக்கும்?

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: ஈரானில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் அங்குள்ள சிறைக்கைதிகளுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. சுமார் 54 ஆயிரம் சிறைக்கைதிகளை அந்த நாட்டு அரசு தற்காலிகமாக விடுதலை செய்ய முன்வந்துள்ளது.

Recommended Video

    கொரோனவால் கிடைத்த வாழ்வு... 54,000 கைதிகள் விடுதலை

    ஈரானில் 2922 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 92 பேர் இந்த வைரசால் கொல்லப்பட்டுள்ளனர். எனவே அந்த நாட்டில் மருத்துவ அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரான் நாட்டில் உள்ள கோம் என்ற பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டு தளங்கள் நிறைய உள்ளன அரபு நாடுகளில் இருந்து இங்கு யாத்திரீகர்கள் அதிகம் வருகை தருவது வழக்கம் அந்த நகரத்தில் இருந்து வைரஸ் பாதிப்பு ஈராக் அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது.

    உதவிகள்

    உதவிகள்

    உலக சுகாதார அமைப்பு ஈரானுக்கு ஒரு குழுவை அனுப்பி உதவிக்கரம் நீட்டியுள்ளது. "தொழில்நுட்ப குழு உறுப்பினர்களுடன், விமானத்தில் 15,000 க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவ பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பப்படுவதோடு, கிட்டத்தட்ட 100,000 பேரை பரிசோதிக்கவும் கண்டறியவும் போதுமான ஆய்வக கருவிகளும் உள்ளன" என்று WHO ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    துபாய்

    துபாய்

    துபாயில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட் ராணுவ விமானம் மூலமாகவும், தொற்றுநோயியல் நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் ஆய்வக சோதனை நிபுணர்களின் ஆறு குழுக்கள் மூலமாகவும் உலக சுகாதார அமைப்பு 8 டன் மருந்துகள் மற்றும் சோதனை கருவிகளை வழங்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

    என்ன நடக்கும்?

    என்ன நடக்கும்?

    இந்த நிலையில்தான், 54,000 சிறைவாசிகளை விடுதலை செய்கிறது ஈரான். தற்காலிகமாக இவர்களை சிறையிலிருந்து வெளியே அனுப்புகிறது. சிறையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அது வேகமாக பரவும் வாய்ப்பு இருப்பதை கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைதிகளை விடுதலை செய்த பிறகு, அதை சுகாதார அமைச்சகம் மேற்பார்வையிடும் என்று ஈரானின் நீதித்துறை செய்தித் தொடர்பாளர் கோலாம்ஹோசின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். அவர்கள் எங்கு வைக்கப்படுவார்கள் அல்லது அதிகாரிகள் எவ்வாறு கண்காணிப்பார்கள் என்பதை அவர் விரிவாகக் கூறவில்லை. கண்காணிக்காவிட்டால் அவர்கள் தலைமறைவாகிவிடுவார்களே என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தப்பித்தாலும் பரவாயில்லை, உயிரோடு இருந்தால் போதும் என்ற முடிவுக்கு அரசு வந்துவிட்டதையே இது காட்டுகிறது.

    பெண் கைதி நிலை

    பெண் கைதி நிலை

    "பாதுகாப்பு கைதிகள் அல்லது வழக்கமான கைதிகள் என்ற பாகுபாடுகளை பொருட்படுத்தாமல் கைதிகளின் ஆரோக்கியம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது" என்று தெரிவித்துள்ளார் அவர். உளவு குற்றச்சாட்டில் ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரிட்டிஷ்-ஈரானிய பெண் நாசனின் ஜாகரி-ராட்க்ளிஃப் விடுவிக்கப்படுவாரா என்பது தெரிவிக்கப்படவில்லை. நசானின் ஜாகரி-ராட்க்ளிஃப் தனக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+