உச்ச கட்ட போர் பதற்றம்.. ஈரானில் இருந்து உடனே வெளியேறுங்க.. இந்தியர்களுக்கு பறந்த வார்னிங்
தெஹ்ரான்: ஈரான்-அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உதவி எண்களும் அறிவித்துள்ளது.
ஈரான்-அமெரிக்கா இடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக மத்திய கிழக்கை நோக்கி அமெரிக்கா தனது போர் விமானங்கள், போர்க்கப்பல்களை நகர்த்தியுள்ளது. இதனால், ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், ஈரானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெஹரானில் உள்ள இந்திய தூதரகம் கூறியிருப்பதாவது ''ஈரானில் தற்போது ஏற்பட்டுள்ள சூழலை கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள், வணிகர்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட தரப்பினர் உடனடியாக ஈரானை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டாம். ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தை, +989128109115; +989128109109; +989128109102; +989932179359 ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும் [email protected] என்ற இமெயில் வழியாக இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications