For Daily Alerts
Just In
தீவிரவாதிகள் ஊடுருவல்- பாகிஸ்தானுக்கு ஈரான் வார்னிங்!
தெஹ்ரான்: தங்கள் நாட்டுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்காவிட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பாகிஸ்தானை ஈரான் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக ஈரான் ராணுவ தளபதி ஹூசைன் சலாமி கூறியுள்ளதாவது:
பாகிஸ்தான் உட்பட அண்டை நாடுகளில் தங்களது நாட்டிலிருந்து ஈரானுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவாத வகையில் தடுக்க வேண்டும். அவர்கள் பயங்கரவாதத்தை கைவிடாவிட்டால் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்.
பாகிஸ்தான் தமது எல்லையைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஹூசைன் சலாமி கூறினார்.
Comments
English summary
Iran will step in to contain terrorists if Pakistan fails to secure its borders and prevent terrorists from slipping into the country, media reported.
Story first published: Friday, October 17, 2014, 12:02 [IST]