ஐ.எஸ் வீழ்த்தப்பட்ட பிறகு இராக்கில் நடந்த முதல் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை
இராக்கில் ஐ.எஸ் அமைப்பு வீழ்த்தப்பட்ட பிறகு, முதல் முறையாக மொசூல் நகரத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பிராத்தனை நடைபெற்றது.
ஐ.எஸ் ஆட்சி இருந்தபோது இங்கு பொதுவெளியில் கிறிஸ்துவ சடங்குகளை செய்வது என்பது ஆபத்தானது மற்றும் கடினமானது.
இங்கு வாழ்ந்த கிறிஸ்துவர்கள் இஸ்லாமிற்கு மதம் மாற வேண்டும் என ஐ.எஸ் அமைப்பு கட்டாயப்படுத்தியது. இவர்கள் வரி கட்ட வேண்டும் அல்லது சாவை எதிர்கொள்ள வேண்டும் எனவும் ஐ.எஸ் அமைப்பு மிரட்டியது. இந்த அடக்குமுறைகளால் பல கிறிஸ்துவர்கள் இங்கிருந்து தப்பித்து சென்றனர்.
கடந்த ஜூலை மாதம் இராக் படைகள் ஐ.எஸ் அமைப்பை மொசூலில் வீழ்த்தியது.
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான 3 வருட சண்டையில் இராக் வெற்றிபெற்றதாக இந்த மாத தொடக்கத்தில் இராக் பிரதமர் ஹைதர் அல் அபாடி அறிவித்தார்.
மொசூலின் செயிண்ட் பால் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பிராத்தனை நடந்தபோது, தேவாலயத்தின் வெளியே ஆயுதம் தாங்கிய வாகனங்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தன.
மொசூல், ஈராக் அமைதியுடன் உலகில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக பிராத்தனை செய்யுமாறு இராக் நாட்டின் கத்தோலிக்க திருச்சபையின் பிஷப் லூயிஸ் ரபேல் சகோ வேண்டுகோள் வைத்தார்.
ஐ.எஸ் வீழ்த்தப்பட்ட பிறகு மொசூலுக்கு திரும்பிய கிறிஸ்துவரான பர்காத் மால்கோ, ''கிறிஸ்தவ வாழ்க்கையைத் தொடர இங்கு பிராத்தனை நடத்துவது முக்கியம்'' என கூறினார்.
செயின்ட் பால் தேவாலயம் தான் மொசூலில் செயல்படும் ஒரே தேவாலயம்.
2014-ல் ஐ.எஸ் அமைப்பு தீவிரமாக செயல்படுவதற்கு முன்பு, மொசூலில் 35,000 கிறிஸ்தவர்கள் இருந்ததாக தேவாலய தலைவர்கள் கூறுகின்றனர்.
பிற செய்திகள்
- ஜெயலலிதாவை விட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் டிடிவி தினகரன் அபார வெற்றி
- மோதி வதைகளின் எதிர்விளைவே தினகரன் வெற்றி: பழ. கருப்பையா
- தினகரன் வெற்றிக்கு அதிமுக சொல்லும் காரணம் சரியா?
- நோட்டாவைவிட குறைந்த வாக்குகள்: பாஜகவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி














Click it and Unblock the Notifications