சதாம் உசேன் ஆட்சிக்கால உளவுப் பிரிவு அதிகாரிதான் ஐ.எஸ். இயக்கத்தின் "மூளை"யாம்!!
Subscribe to Oneindia Tamil
பெர்லின்: உலக நாடுகளை அதிர வைத்துக் கொண்டிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை உருவாக்கி அதன் மூளையாக செயல்பட்டது சதாம் உசேன் ஆட்சிக் காலத்தில் ஈராக் உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றிய சமிர் அப்த் முகmமது அல் கலிஃபா தான் என அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெர்மன் நாட்டின் www.spiegel.de இணைய தளம் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் 31 பக்க ஆவணங்களை பெற்றுள்ளது. கையால் எழுதப்பட்டுள்ள அந்த ஆவணங்களில் ஐ.எஸ். இயக்கத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என விவரிக்கப்பட்டுள்ளது.
www.spiegel.de இணையதளம் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
- ஈராக் அதிபராக சதாம் உசேன் இருந்த போது விமானப் படையின் உளவுப் பிரிவு அதிகாரியாக இருந்தவர் சமிர் அப்த் முகம்மது அல் கலிஃபாவி. இவர்தான் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் மூளையாக கருதப்படுகிறார். இவரைத்தான் ஹாஜி பக்கர் என ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் அழைக்கிறது.
- சதாம் உசேன் ஆட்சிக் காலத்தில் எப்படியெல்லாம் அரசு இயந்திரம் இயங்கியதோ அதே பாணியில்தான் அதாவது கடத்தல், படுகொலை என்ற பாணியில் சிரியாவின் வடபகுதியை ஆக்கிரமித்துள்ளது ஐ.எஸ். இயக்கம்.
- தமது கைப்பட ஐ.எஸ். இயக்கம் எப்படி கட்டமைக்க வேண்டும்; யார் யாருக்கு என்ன என்ன பொறுப்புகள்; இயக்கத்துக்கான நிதியை எப்படி திரட்டுவது என்பதை எழுதியிருக்கிறார் ஹாஜி பக்கர்.
- 2006ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் தடுப்பு காவலில் இருந்தவர் ஹாஜி பக்கர்.
- 2010ஆம் ஆண்டு பக்கரும் ஈராக் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகளும் அபு பக்கர் அல் பக்தாதியை இஸ்லாமிய தேசத்தின் அதிகாரப்பூர்வ தலைவராக உருவாக்கினார்கள்..
- 2012ஆம் ஆண்டு வடக்கு சிரியாவில் நகரங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை பார்வையிடுவதற்காக ஹாஜி பக்கர் சென்றார். அதன் பின்னர் செளதி அரேபியா, துனிசியா, செச்சேனியா, உஸ்பெஸ்கிஸ்தான் என வெளிநாடுகளில் இருந்து தீவிரவாதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தியவரும் ஹாஜி பக்கர்தான்.
- 2014ஆம் ஆண்டு சிரியாவில் நடைபெற்ற மோதலில் ஹாஜி பக்கர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
- ஹாஜி பக்கர் கொல்லப்பட்ட பின்னர் 2014ஆம் ஆண்டு அவர் வீட்டில் இருந்த ஆவணங்கள் துருக்கி கடத்தப்பட்டு அங்கிருந்து ஜெர்மனுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
- இவ்வாறு அந்த இணைய தள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications