துபாயிலுள்ள உலகின் உயரமான புர்ஜ் கலீபா கட்டிடத்தில் தீ பிடித்ததாக வெளியான படங்களால் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் 828 மீட்டர் உயரம் கொண்ட புர்ஜ் கலீபா கோபுரம், உலகின் உயர்ந்த கட்டிடமாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று புர்ஜ் கலீபா கட்டிடம் தீப்பிடித்து புகை வருவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இதனை தொடர்ந்து புர்ஜ் கலீபா கட்டிடத்தில் தீ பிடித்து விட்டதாக தகவல் பரவிதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் இந்த சம்பவத்தை துபாய் போலீசாரும், அந்த கட்டிடத்தை நிர்வகித்து வருபவர்களும் திட்டவட்டமாக மறுத்தனர். புர்ஜ் கலீபா கட்டிடத்தில் பனிமூட்டம் காரணமாக புகை போன்று ஏற்பட்டது. இதனை சிலர் படம்பிடித்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, அங்கு தீ பிடித்ததாக வதந்தியை பரப்பியுள்ளனர். எனவே இதனை யாரும் நம்பவேண்டாம் என போலீசார் கேட்டுக் கொண்டதோடு எச்சரித்தும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications