இதப் படிச்சுட்டுப் போய் நீங்க வாந்தி எடுத்தா.. அதுக்கு கம்பெனி பொறுப்பில்லை!
ஜகார்தா: இந்தோனேசியாவில் உள்ள ஒரு மார்க்கெட்டுக்குப் போனால் நிச்சயம் உங்களுக்கு வாந்தி வரும் அல்லது மயக்கம் வரும்.. அதிகபட்சம் தலை சுற்றி பைத்தியமாகக் கூட மாறி விட நேரிடும்... காரணம், அந்த மார்க்கெட்டில் எலிகளையும், நாய்களையும், வவ்வால்களையும், குரங்குகளையும் அப்படியே கொன்று, முழு உடம்போடு பொறித்தும், பிரை செய்தும் படு சூடாக விற்று வருகிறார்கள்.
தனித் தனியாக கறி செய்யாமல் அப்படியே முழுசாக அவற்றை பொறித்து சுடச் சுட விற்கிறார்கள். இதை வாங்க அங்கு பெரும் கூட்டமே அலை மோதுகிறது.

என்ன மனிதர்கள் இவர்கள்...
செத்து சுட்ட நிலையில் கிடக்கும் நாய்களையும், எலிகளையும், குரங்குகளையும் பார்ப்போருக்கு படு பாவமாக தோன்றும். இப்படியெல்லாமா மனிதர்கள் கொடூரமாக சாப்பிடுகிறார்கள் என்று அயர்ச்சியும் ஏற்படும்.

அப்படியே சாப்பிடலாமாம்....
அந்த மார்க்கெட் முழுக்க இப்படி நாய்க்கறி, எலிக்கறி, குரங்குக் கறியை பார்க்கலாம். கட்டித் தொங்க விட்டுள்ளனர் கடை கடையாக. அவற்றை முழுமையாக சுடப்பட்டு, பொறிக்கப்பட்ட நிலையில் வாங்கிச் செல்லலாம். வாங்கி அப்படியே சாப்பிடலாம்.

கோழிக்கறியெல்லாம் ஜுஜூபி...
டொமோஹான் மார்க்கெட் என்பதற்கு அதற்குப் பெயர். இந்தோனேசியாவின் வடக்கு சலுவேசி என்ற மகாணத்தில் அது உள்ளது. வவ்வால், நாய், பூனை, பன்றி, எலிகள், பெரிய பெரிய பாம்புகள் என இங்கு கிடைக்காத விலங்குக் கறியே இல்லை. ஆடு, கோழியெல்லாம் இவர்களுக்கு ஜுஜுபியாகும்.

பயங்கரமா கருப்பா....
இந்தக் கடைகளில் காணப்படும் விலங்குகளை ஓமன் நாட்டைச் சேர்ந்த பிளாக்கர் மற்றும் புகைப்படக்காரர் ரேமாண்ட் வால்ஷ் படம் பிடித்து அதிர வைத்துள்ளார். பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது இந்த விலங்குக் கறி.

திகில் கடைகள்....
இதுகுறித்து வால்ஷ் கூறுகையில், வழக்கமாக நாம் காய்கறிக் கடைகளில் விதம் விதமான காய்கறிகளை தொங்க விட்டிருப்பதை, குவித்து வைத்திருப்பதைப் பார்ப்போம். ஆனால் இங்கு அதே போல நாய்களையும், பூனைகளையும், குரங்குளையும் கொன்று குவித்து வைத்துள்ளனர். பார்க்கவே திகிலாக இருக்கிறது என்றார்.

இங்கப் பார்க்கலாம்...
தனது www.manonthelam.com என்று பெயரிலான பிளாக்கில் இதுகுறித்த புகைப்படங்களையும், கதைகளையும் அவர் போட்டு வைத்துள்ளார்.

மரண பயத்தில் நாய்கள்....
இறந்த விலங்குகள் ஒரு பக்கம் கறியாகிக் கிடக்க மறுபக்கம் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நாய்கள், பூனைகள், குரங்குகளைப் பார்க்கவே பயங்கரப் பரிதாபமாக இருந்ததாகவும் வால்ஷ் குறிப்பிடுகிறார்.

நாய்க்கறி சூப்பர்...
வால்ஷ் மேலும் கூறுகையில் மேற்கத்திய நாடுகளில் நாய்களை செல்லப் பிராணிகளாகப் பார்க்கிறார்கள். பல நாடுகளிலும் கூட அப்படித்தான். ஆனால் இந்தோனேசியாவிலும், தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் நாய் விரும்பி சாப்பிடப்படும் உணவாக உள்ளது. இது கலாச்சார வித்தியாசமாகும் என்றார்.

நாய் ரோஸ்ட்...
வால்ஷ் தொடர்ந்து கூறுகையில், அனைத்து விலங்குகளையும் முதலில் கொல்கிறார்கள். பின்னர் தோலை உரித்து அப்படியே நெருப்பில் இட்டு ரோஸ்ட் செய்து விடுகிறார்கள். முழு உடம்போடு பின்னர் விற்பனை செய்கிறார்கள்.

என்னக் கொடுமை சார் இது....
குரங்குகள், பூனைகள் போன்றவற்றை துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறார்களாம். வவ்வால், எலி ஆகியவற்றை தலையை நசுக்கிக் கொல்கிறார்கள். அல்லது மரம் அல்லது டேபிளில் தலையை ஓங்கி அடித்துக் கொல்கிறார்களாம். பன்றிகளை மரக்கட்டையால் அடித்தே கொல்கிறார்கள் என்று கூறி நிறுத்தினார் வால்ஷ்.
படிக்கப் படிக்க உவ்வ்வே.. வருது!!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications