224 பேருடன் பயணித்த ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்- ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் அறிவிப்பு!!
கெய்ரோ: எகிப்தில் இருந்து 224 பேருடன் புறப்பட்ட ரஷ்யா பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் அறிவித்துள்ளது.
எகிப்தில் இருந்து 224 பேருடன் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்துக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. ஆனால் எகிப்தின் ஷினாய் தீபகற்ப பகுதியில் அது தொடர்பிழந்தது.

இதன் பின்னர் அந்த விமானம் நடுவானில் வெடித்து சிதறி விழுந்ததாகவும் அதில் பயணித்த 224 பேரும் உயிரிழந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த விபத்துக்கு காரணம் தொழில்நுட்பக் கோளாறுதான் என்று முதலில் கூறப்பட்டது.
ஆனால் தற்போது இந்த விமானத்தை தாங்கள்தான் சுட்டு வீழ்த்தியதாக ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் அறிவித்துள்ளனர்.
224 பேரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்திருப்பதாக வெளியான தகவல் உலக நாடுகளை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் இந்த தகவலை ஏற்க ரஷ்யா மறுக்கிறது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்கி தங்கள் விமானம் தகர்க்கப்பட்டதற்கான ஆதாரமில்லை என்று ரஷ்யா அறிவித்துள்ளது. எனவே ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது எப்படி? என்பதில் மர்மம் நீடிக்கிறது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications