ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் "கோழி குண்டு"!
பாக்தாத்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடைப்பிடித்து வரும் நூதனமான தற்கொலைப் படைத் தாக்குதல் குறித்த விவரம் வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது. இந்தத் தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபடுவது மனிதர்கள் அல்ல.. மாறாக கோழிகள்.
ஆம், கோழிகளை அவர்கள் தற்கொலைப் படை போல பயன்படுத்தி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது கோழிகளின் உடம்பில் வெடிகுண்டைக் கட்டி அதை எதிரிகளின் முகாமுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
கோழி உள்ளே போனதும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் அந்தக் குண்டை வெடிக்கச் செய்து சேதத்தை ஏற்படுத்துகின்றனர். இப்படி கோழி குண்டு மூலம் ஐஎஸ்ஐஎஸ் தாக்குவது அதிகரித்து வருகிறதாம். இதற்கு நல்ல பலன் இருப்பதால் இதைத் தொடர்ந்து அவர்கள் செய்து வருகின்றனர்.

சிக்கல் மிச்சம்
மனிதர்களை தற்கொலைப் படைத் தீவிரவாதியாக அனுப்புவதில் பல சிக்கல்கள் இருப்பதால் செலவே இல்லாமல் கோழிகளை தற்கொலைப் படையாக பயன்படுத்தி வருகிறதாம் ஐஎஸ் அமைப்பு.

வெடிகுண்டுக் கோழிகள்
தற்கொலைப் படைத் தாக்குதலுக்காக பிடித்து வரும் கோழிகளை நன்கு பழக்கி பின்னர் உடலில் வெடிகுண்டைக் கட்டி விடுகின்றனர். அதன் பின்னர் அதை எதிரி முகாமுக்குள் அனுப்பி வைத்து ரிமோட் மூலம் வெடிக்கச் செய்து தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர்.

சமூக வலைதளங்களில் புகைப்படம்
கோழிகள் உடம்பில் வெடிகுண்டை கட்டுவது போன்ற படமும் வெளியாகியுள்ளது. இதை வெளியிட்டது யார், இது உண்மையா, பொய்யா என்பது தெரியவில்லை. ஆனால் ஒரு இங்கிலாந்து ராணுவ வீரர் இதுதொடர்பாக கூறியுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கதாக உள்ளது.

என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்
குர்திஷ் படையினருடன் இணைந்து தீவரவாதிகளுக்கு எதிராக போராடி வரும் படையில் உள்ளவரான அவர் கூறுகையில், ஐஎஸ் தீவிரவாதிகள் என்னெல்லாம் வழி உள்ளதோ அதையெல்லாம் கடைப்பிடிக்கக் கூடியவர்கள். அவர்களுக்கு லாஜிக் எல்லாம் கிடையாது. மனிதர்களையே தாறுமாறாக வெட்டிக் கொள்ளும் அவர்களுக்கு விலங்குகள் மீது சற்றும் பாசம் வர வாய்ப்பில்லை என்றார்.
ரொம்பக் கொடூரமாகத்தான் இருக்கிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications