ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் "கோழி குண்டு"!
பாக்தாத்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடைப்பிடித்து வரும் நூதனமான தற்கொலைப் படைத் தாக்குதல் குறித்த விவரம் வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது. இந்தத் தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபடுவது மனிதர்கள் அல்ல.. மாறாக கோழிகள்.
ஆம், கோழிகளை அவர்கள் தற்கொலைப் படை போல பயன்படுத்தி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது கோழிகளின் உடம்பில் வெடிகுண்டைக் கட்டி அதை எதிரிகளின் முகாமுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
கோழி உள்ளே போனதும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் அந்தக் குண்டை வெடிக்கச் செய்து சேதத்தை ஏற்படுத்துகின்றனர். இப்படி கோழி குண்டு மூலம் ஐஎஸ்ஐஎஸ் தாக்குவது அதிகரித்து வருகிறதாம். இதற்கு நல்ல பலன் இருப்பதால் இதைத் தொடர்ந்து அவர்கள் செய்து வருகின்றனர்.

சிக்கல் மிச்சம்
மனிதர்களை தற்கொலைப் படைத் தீவிரவாதியாக அனுப்புவதில் பல சிக்கல்கள் இருப்பதால் செலவே இல்லாமல் கோழிகளை தற்கொலைப் படையாக பயன்படுத்தி வருகிறதாம் ஐஎஸ் அமைப்பு.

வெடிகுண்டுக் கோழிகள்
தற்கொலைப் படைத் தாக்குதலுக்காக பிடித்து வரும் கோழிகளை நன்கு பழக்கி பின்னர் உடலில் வெடிகுண்டைக் கட்டி விடுகின்றனர். அதன் பின்னர் அதை எதிரி முகாமுக்குள் அனுப்பி வைத்து ரிமோட் மூலம் வெடிக்கச் செய்து தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர்.

சமூக வலைதளங்களில் புகைப்படம்
கோழிகள் உடம்பில் வெடிகுண்டை கட்டுவது போன்ற படமும் வெளியாகியுள்ளது. இதை வெளியிட்டது யார், இது உண்மையா, பொய்யா என்பது தெரியவில்லை. ஆனால் ஒரு இங்கிலாந்து ராணுவ வீரர் இதுதொடர்பாக கூறியுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கதாக உள்ளது.

என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்
குர்திஷ் படையினருடன் இணைந்து தீவரவாதிகளுக்கு எதிராக போராடி வரும் படையில் உள்ளவரான அவர் கூறுகையில், ஐஎஸ் தீவிரவாதிகள் என்னெல்லாம் வழி உள்ளதோ அதையெல்லாம் கடைப்பிடிக்கக் கூடியவர்கள். அவர்களுக்கு லாஜிக் எல்லாம் கிடையாது. மனிதர்களையே தாறுமாறாக வெட்டிக் கொள்ளும் அவர்களுக்கு விலங்குகள் மீது சற்றும் பாசம் வர வாய்ப்பில்லை என்றார்.
ரொம்பக் கொடூரமாகத்தான் இருக்கிறது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications