2020-ல் இந்தியா தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது போல் ஐ.எஸ் தீவிரவாதிகள் வரைபடம் வெளியீடு
லண்டன் : அடுத்த 5 ஆண்டுகளில் அதாவது 2020 ஆம் ஆண்டில் இந்தியா ஐ.எஸ்.ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருக்கும் என்று வரைபடம் வெளியிட்டு தீவிரவாதிகள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
ஈராக், சிரியா ஆகிய நாடுகளை மைய தளமாக கொண்டு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் இயங்கி வருகிறது. அதன் தீவிரவாதிகள், உலகின் பல நாடுகளில் வேரூன்றி உள்ளனர். ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை போரிட்டு வருகிறது. இந்த படைகளுக்கு ஆதரவாக சவுதிஅரேபியாவும் களத்தில் இறங்கியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள், தாங்கள் பிடிக்கும் பிணைக் கைதிகளை தலையை துண்டித்தும், உயிரோடு தீ வைத்து எரித்தும், துப்பாக்கியால் சுட்டும் மிக கொடூரமாக கொன்று குவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 2020-க்குள் ஒட்டுமொத்த இந்தியாவையும் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது போல் ஐ.எஸ் தீவிரவாதிகள் வரைபடத்தை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த 5 ஆண்டுகளுக்குள் மத்திய கிழக்கு, வடக்கு ஆப்ரிக்கா, மற்றும் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள், ஐரோப்பிய நாட்டின் சில பகுதிகள் முற்றிலும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று அவர்கள் வெளியிட்டுள்ள வரைபடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தாங்கள் பிடிக்கும் பகுதிகளுக்கு அரபு மொழியில் பெயர்களும் சூட்டியுள்ளனர். இந்த தகவல்கள் லண்டனில் இருந்து வெளியாகும் தி மிரர் என்ற இதழ் வெளியிட்டுள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications