ஜிஹாதுக்காக ஜெர்மனியில் உள்ள தேவாலயங்கள், பள்ளிகளில் ஐஎஸ் ஆதரவாளர்கள் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

பெர்லின்: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் தீவிரவாதிகளுக்கு அளிக்க ஜெர்மனியில் உள்ள தேவாலயங்கள், பள்ளிகளில் இருந்து பணத்தை திருடி சிக்கியுள்ளனர்.

ஈராக் மற்றும் சிரியாவில் அட்டூழியம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் பல்வேறு நாடுகளில் உள்ளனர். இந்நிலையில் ஜெர்மனியில் உள்ள ஒரு கும்பல் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு உதவ தேவாலயங்கள் மற்றும் பள்ளிகளில் இருந்து ரூ.13.6 லட்சம் திருடியுள்ளது.

ISIS men loot German churches, schools to fund jihad

அந்த கும்பல் தேவாலயங்களில் இருந்து காணிக்கை பெட்டிகள், சிலுவைகள் மற்றும் பிற பொருட்கள், பள்ளிகளில் இருந்து லேப்டாப்புகள் ஆகியவற்றை திருடியுள்ளது. அந்த கும்பலின் தலைவர் மொராக்கோவைச் சேர்ந்தவர். அவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியை செய்து வருகிறார்.

தீவிரவாதிகளுக்கு அளிக்க திருட்டு வேலையில் ஈடுபட்ட அந்த கும்பலை போலீசார் கைது செய்து கலோன் நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஈராக் மற்றும் சிரியாவில் வெளிநாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்காக போராடி வருகிறார்கள்.

அதில் 5 ஆயிரம் பேர் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தீவிரவாதிகள் சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் அமைப்புக்கு ஆள் சேர்த்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+