வங்கதேசத்தில் ஆங்கில பேராசிரியரை அரிவாளால் வெட்டிக் கொன்ற ஐஎஸ் தீவிரவாதிகள்

Subscribe to Oneindia Tamil

டாக்கா: வங்கததேசத்தில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கொடூரமாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

வங்கதேசத்தில் உள்ள ராஜ்ஷாஹி நகரில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்றில் ஆங்கில பேராசிரியராக இருந்தவர் ரிசாவுல் கரீம் சித்திக்(58). அவர் தனது வீட்டில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு செல்ல பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் சித்திக் பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ISIS militants brutally kill Bangladeshi Professor, slit 80% of his neck

இது குறித்து போலீசார் கூறுகையில்,

சித்திக்கின் கழுத்தில் மட்டும் 3 வெட்டுகள் விழுந்துள்ளது. அவரது கழுத்து 80 சதவீதம் அறுபட்டு இருந்தது. இந்த தாக்குதல் பாணியை பார்த்தால் இதை தீவிரவாதிகள் தான் செய்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறோம். இசையில் ஈடுபாடு உள்ள சித்திக் பாக்மாராவில் இசை பள்ளியை துவங்கி நடத்தி வந்துள்ளார் என்றனர்.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. வங்கதேசத்தில் கடந்த 2013ம் ஆண்டில் இருந்து மதச்சார்பற்ற பிளாக்கர்களை உள்ளூர் இஸ்லாமிய போராளிகள் கொடூரமாக கொலை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+