தாடியை எடுத்துவிட்டு பெண்கள் போன்று உடையணிந்து ரமாதியில் இருந்து தப்பிக்க முயன்ற ஐஎஸ் தீவிரவாதிகள்
பாக்தாத்: ஈராக்கில் உள்ள ரமாதி நகரில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சிலர் தாடி, மீசையை எடுத்துவிட்டு பெண்கள் போன்று உடை அணிந்து தப்பியபோது ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
ஈராக்கில் உள்ள அன்பார் மாகாண தலைநகரான ரமாதி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வசம் இருந்தது. இந்நிலையில் ஈராக் ராணுவத்தினர் தீவிரவாதிகளுடன் போராடி
அந்நகரை மீட்டனர். ரமாதி நகரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து முழுமையாக மீட்டுவிட்டதாக ராணுவத்தினர் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டனர்.

ராணுவத்தினர் நகரில் இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் தீவிரவாதிகள் ரமாதி நகரை விட்டு தப்பியோடிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த புதன்கிழமை அன்று 9 தீவிரவாதிகள் தாடி, மீசையை எடுத்துவிட்டு பெண்கள் போன்று உடை அணிந்து ரமாதி நகரில் இருந்து தப்பிச் செல்ல பார்த்தனர். சோதனைச்சாவடி அருகே அவர்களை ராணுவத்தினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
இது குறித்து ராணுவத்தினர் கூறுகையில்,
தீவிரவாதிகள் தாடியை எடுத்துவிட்டு பெண்கள் போன்று உடை அணிந்து எங்களை ஏமாற்ற நினைத்தனர். ஆனால் அவர்கள் நகரில் இருந்து தப்பியோடும் முன்பு அவர்களை பிடித்துவிட்டோம் என்றனர்.












Click it and Unblock the Notifications