சிரியாவில் 25 ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்ற சிறுவர்கள்: ஐஎஸ்ஐஎஸ் 'திடுக்' வீடியோ
ராக்கா: சிரியாவில் உள்ள பால்மிரா நகரில் 25 ராணுவ வீரர்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த சிறுவர்கள் சுட்டுக் கொலை செய்த வீடியோ வெளியாகியுள்ளது.

சிரியாவில் உள்ள பால்மிரா நகரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடந்த மே மாதம் கைப்பற்றினர். இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பால்மிரா நகரில் வைத்து சிரியா ராணுவ வீரர்கள் 25 பேரை கொலை செய்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் ராணுவ வீரர்களின் கைகள் கட்டப்பட்டு வரிசையாக மண்டியிட வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பின்னால் பதின்வயதில் இருக்கும் 25 சிறுவர்கள் கையில் துப்பாக்கியுடன் நிற்கிறார்கள். முகத்தை கருப்புத் துணியால் மறைத்திருக்கும் சிறுவர்கள் தீவிரவாதி ஒருவர் கூறியதும் ராணுவ வீர்களை தலையில் சுட்டுக் கொன்றனர்.
இந்த சம்பவம் யுனெஸ்கோ பாரம்பரிய தலமான பால்மிரா நகரில் நடந்துள்ளது. பால்மிரா நகரை கைப்பற்றியதும் தீவிரவாதிகள் அங்கிருந்த அருங்காட்சியகத்திற்குள் புகுந்து பழமை வாய்ந்த சிலைகள் பலவற்றை உடைத்து சேதப்படுத்தினர்.
25 ராணுவ வீரர்கள் பால்மிரா நகரில் உள்ள ரோமன் ஆம்ஃபிதியேட்டரில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக அதே இடத்தில் வைத்து தான் தீவிரவாதிகள் 20 ஆண்களை கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications