உலகையே மிரட்டும் ஐஎஸ் தீவிரவாதிகள் யாரை கண்டு பயந்து நடுங்குகிறார்கள் தெரியுமா?
ராக்கா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பெண்களை கண்டால் அஞ்சுவதாகவும், வீராங்கனைகளுடன் மோத பயப்படுவதாகவும் குர்து இன பெண்கள் படையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈவு இரக்கமின்றி மக்களை கொலை செய்ய பெயர்போனவர்கள். இந்நிலையில் அவர்கள் பெண்களை கண்டு பயப்படுவது தெரிய வந்துள்ளது. அதாவது பெண்கள் கையால் பலியானால் சொர்க்கத்திற்கு செல்ல முடியாது என்று தீவிரவாதிகள் நம்புகிறார்கள்.
இது குறித்து ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து போராடும் குர்து இன பெண்கள் படை கமாண்டர் பென் வேதிமன்(21) கூறுகையில்,

இஸ்லாம்
இஸ்லாத்தின் பெயரால் போராடி வருவதாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்கள்
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளில் யாராவது ஒருவர் பெண், குர்து இன பெண்ணால் கொல்லப்பட்டால் அவர் சொர்க்கம் செல்ல மாட்டார் என நம்புகிறார்கள். அவர்கள் பெண்களை கண்டால் பயப்படுகிறார்கள் என்றார் பென்.

கொல்வோம்
பென்னின் குழுவில் உள்ள 20 வயது எஃப்லின் கூறுகையில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் எங்கள் பகுதியை மட்டும் தாக்க வரட்டும். அவர்களில் ஒருவரைக் கூட உயிரோடு விட மாட்டோம் என்றார்.

ஐஎஸ்ஐஎஸ்
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பெண்கள், சிறுமிகளை கடத்தி வந்து அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து செக்ஸ் அடிமை சந்தையில் விற்று வருகிறார்கள். இந்நிலையில் தான் அவர்கள் போராட்டத்தில் பெண்கள் கையால் பலியாவதற்கு அஞ்சுவது பற்றி தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications