Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொசூலில் ஈராக் வீரர்கள் 15 பேர் தலையை துண்டித்த ஐஎஸ் பயங்கரவாதிகள்!

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்: 15 ஈராக் படைவீரர்களை மொசூலில் உள்ள பொது இடத்தில் வைத்து தலையை துண்டித்து கொன்று ஐஎஸ் பயங்கரவாதிகள் அட்டூழியம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொசூலில் ஈராக் படைகளுக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில், மொசூல் நகர பொது இடத்தில் வைத்து 15 ஈராக் படை வீரர்களை தலையை துண்டித்துள்ளன ஐஎஸ் பயங்கரவாதிகள்.

 Islamic State beheads 15 Iraqi soldiers in Mosul

இதனை நூற்றுக்கணக்கான மக்கள் பார்க்கும்படி அவர்கள் பொது இடத்தில் வைத்து செய்ததாக செய்தி நிறுவனம் ஒன்றை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடக கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் தென்மேற்கு மொசூலில் நடந்த சண்டையின்போது இந்த வீரர்களை பயங்கரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கிழக்கு மொசூலில் நடந்து வரும் சண்டையில் ஈராக் படைகள் முன்னேறி வருவதாகவும் அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+