பிரஸ்ஸல்ஸ் தொடர் குண்டுவெடிப்பு: ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்பு !
பிரஸ்ஸல்ஸ்: பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இன்று காலை நடைபெற்ற இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 34 பேர் பலியாயினர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதலில் 14 பேரும், மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற மற்றொரு குண்டு வெடிப்பில் 20 பேரும் பலியாயினர். இந்த இரு சம்பவங்களிலும் 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் இன்று காலை 8 மணியளவில் (இந்திய நேரம் பிற்பகல் 1.30) அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்தன. இதில் ஒரு வெடிகுண்டை தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் வெடித்திருக்கலாம் எனத் தெரிகிறது.
இந்த வெடிகுண்டு தாக்குதலால் குண்டு வெடித்ததில் விமான நிலைய கூரை இடிந்து விழுந்ததால் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இச்சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 96 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து மால்பீக் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட மற்றொரு பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்தனர். 106 பேர் காயமடைந்தனர்.
இந்த வெடிகுண்டு சம்பவங்களைத் தொடர்ந்து நகரில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டது. போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனிடையே இந்த சம்பவத்திற்கு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன், இது ஒரு வெறுக்கத்தக்க செயல் என்று கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் சார்லஸ் கூறுகையில், பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இது ஒரு கண்மூடித்தனமான, கோழைத்தனமாக தாக்குதல். எல்லைப் பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகள் இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், வெடிப்பொருட்களுடன் விமான நிலையத்திலும், மெட்ரோ ரயில் நிலையத்தில் புகுந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ளது.
பாரிஸில் தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளியை 4 நாட்களுக்கு முன்னர் பிரஸ்ஸல்ஸ் காவல்துறையினர் பிடித்தனர். இதையடுத்து இன்று தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications