"லேசாக நகர்ந்தாலும் க்ளோஸ்.." காசாவை சுற்றி வளைக்கும் இஸ்ரேல் ராணுவம்! நொடிக்கு நொடி எகிறும் பதற்றம்
டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், காசா நகரை இஸ்ரேல் சுற்றி வளைக்க ஆரம்பித்துள்ளது. இது அப்பகுதியில் நிலவும் பதற்றத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த சில வாரங்களாகப் போர் தொடர்ந்து நடந்து வருகிறது. ஹமாஸ் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையை இஸ்ரேல் தீவிரப்படுத்தி இருக்கிறது. காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.

தாக்குதலை நிறுத்தி, பாலஸ்தீன கைதிகளை விடுவித்தால் தங்களிடம் இருக்கும் அனைத்து பிணையக் கைதிகளையும் விடுவிக்கத் தயாராக உள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இருந்த போதிலும், இஸ்ரேல் ஹமாஸ் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
தொடர் தாக்குதல்: காசா மீதான தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி இருக்கிறது. கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் காசா எல்லைக்குள் செல்லும் இஸ்ரேல் பீரங்கிகள் ஹமாஸ் இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக வைத்திருந்தது. இரவில் சில மணி நேரம் தாக்குதல் நடத்திவிட்டு பின்னர் மீண்டும் இஸ்ரேலுக்குத் திரும்புவதையே இஸ்ரேல் ராணுவம் வாடிக்கையாக வைத்திருந்தது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் காசா மீதான படையெடுப்பு வேண்டாம் என்றே தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், இஸ்ரேல் படையெடுப்பு முடிவைக் கைவிடுவதாகத் தெரியவில்லை. இதன் காரணமாகவே காசா எல்லையில் இஸ்ரேல் தொடர்ச்சியாக ராணுவத்தைக் குவித்து வருகிறது. இதனால் அங்கே மிகவும் பதற்றமான ஒரு சூழலே ஏற்பட்டுள்ளது.
பீரங்கிகள்: இதற்கிடையே இஸ்ரேல் பீரங்கிகள் இன்றைய தினம் காசா நகரை நோக்கி முன்னேறி உள்ளது. காசா நகரைச் சுற்றி வலைக்கும் இஸ்ரேல் ராணுவம் எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை ஆரம்பிக்கும் என்றே தெரிகிறது. இதனால் காசாவில் உள்ள முக்கிய சாலைகளும் முடங்கி இருக்கிறது.தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலில் பல ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "கடந்த 24 மணி நேரத்தில் நாங்கள் 600க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளோம்.. இதற்கு முன்பு 450 இலக்குகளைத் தாக்கியிருந்தோம். வரும் நாட்களில் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். வடக்கு காசா பகுதியில் தான் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள். அவர்களைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தி வருகிறோம்"என்று அவர் தெரிவித்தார்.

முக்கிய சாலை முடக்கம்: இது ஒரு பக்கம் இருக்கக் காசா நகரின் தெற்கு பகுதியில் இருந்தும் ஜெய்துன் மாவட்டத்திற்குள் இஸ்ரேல் பீரங்கிகள் நுழைந்துள்ளன. வடக்கு காசாவில் இருந்து பொதுமக்கள் தெற்கு நோக்கி வரும் நிலையில், அந்த முக்கிய சாலையையும் இஸ்ரேல் ராணுவம் முடக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வரும் முக்கிய சாலையான சலாஹெதின் சாலையை இஸ்ரேல் முடக்கியுள்ளதாகவும் அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களை நோக்கியும் துப்பாக்கிச் சூடு நடத்துவதாகவும் காசா மக்கள் கூறுகின்றனர்.
வடக்கு காசாவில் தாக்குதல் நடத்துவதால் உடனடியாக தெற்கு நோக்கிச் செல்லும் படி இஸ்ரேல் ஏற்கனவே பல முறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் கடந்த சில வாரங்களில் ஏற்கனவே பெரும்பாலான மக்கள் வடக்கு காசாவை விட்டு வெளியேறிவிட்டனர். இருப்பினும், இன்னுமே கூட சில ஆயிரம் பேர் அங்கே இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நேரத்தில் வெளியேறும் பாதையை இஸ்ரேல் மறித்துள்ளதாக வெளியான இந்தத் தகவல் பகீர் கிளப்புவதாகவே இருக்கிறது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications