பங்கரில் பதுங்குங்கள்.. குழிகளை விட்டு வெளியே வர வேண்டாம்.. சொந்த குடிமக்களுக்கு இஸ்ரேல் உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்: இஸ்ரேல் மீது ஈரான் பயங்கர தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலியர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்து இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுமாறு இஸ்ரேலியர்களுக்கு உத்தரவு

இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக ஈரான் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இஸ்ரேலியர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் என்று உள்துறை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

மேலும், அனைத்து பொது இடங்களிலும் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற அலுவலகங்கள் அனைத்தும் வெள்ளக்கிழமை மூடப்பட்டிருக்கும். நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பான அறைகள் அல்லது கட்டிடங்களில் உள்ள பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று உள்துறை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. அப்படி இல்லாதவர்கள் பொது பதுங்கு குழிகளை பயன்படுத்தலாம். எதுவுமே கிடைக்காத பட்சத்தில் மாடிப்படிகளில் தஞ்சம் அடையலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகள் நாளை இரவு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் வான்வெளி மூடப்பட்டதால், எல் அல் விமான நிறுவனம் தனது விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.

முக்கிய நிகழ்வுகள்

இஸ்ரேல் ஈரான் இரண்டு நாடுகளும் சரமாரியாக மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் போர் உச்சம் அடைந்து உள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இஸ்ரேல் ஏவுகணை அட்டாக் நடத்தி உள்ளது. இதன் மூலம் 2 நாட்களில் 3வது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பகுதிகளில் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், இஸ்ரேல் "ஆபரேஷன் ரைசிங் லயன்" என்ற பெயரில் ஈரான் மீது ஒரு பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நேற்று இரவு நடத்தியுள்ளது. இந்த நடவடிக்கையானது வெள்ளிக்கிழமை அதிகாலை தெஹ்ரான் மற்றும் நடான்ஸ் அருகே உள்ள ஈரான் நாட்டின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டத்தின் மையப்பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்டது.

ஆரம்ப அறிக்கைகளின்படி, இந்தத் தாக்குதலில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி மற்றும் தலைமை அதிகாரி முகமது பாகேரி உட்பட பல உயர்மட்ட ஈரான் இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வான்வழித் தாக்குதலைத இஸ்ரேல் தொடங்கி உள்ளது. இந்த தாக்குதல்கள், ஈரானின் அணு உலைகள், ராணுவத் தளபதிகள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளை குறி வைத்தன. இந்த தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்டனர், 320க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் தெரிவித்தார். இதற்குப் பதிலடியாக டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார், 34 பேர் காயமடைந்தனர்.

இன்று அதிகாலைக்குள் இரு நாடுகளும் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தின. இதனால் முக்கிய நகரங்களில் விமானத் தாக்குதல் எச்சரிக்கை ஒலித்தது. வெடிப்புகளும் நிகழ்ந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+