"அணுமின் நிலையம் + ரஷ்ய ஏவுகணை.." இஸ்ரேல் பிளானே இதுதான்! ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய ஈரான்.. பகீர்
டெல் அவிவ்: ஈரானில் உள்ள இஸ்பஹான் மாகாணத்தில் கடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் குறித்து இப்போது சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் சில காலமாகவே பதற்றமான ஒரு சூழல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். ஒரு பக்கம் இஸ்ரேல் ஹமாஸ் மோதல் என்றால் இப்போது ஈரான் இஸ்ரேல் இடையேயும் மோதல் வெடித்துள்ளது.

முதலில் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் சில ஈரான் தளபதிகள் கொல்லப்பட்டனர். இதனால் கொந்தளித்த ஈரான், இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இருப்பினும், இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு இந்த தாக்குதலை முறியடித்துவிட்டது.
பகீர் தகவல்: இதற்கிடையே இதற்கு இஸ்ரேல் மீண்டும் கடந்த வாரம் பதிலடி கொடுத்தது. ஈரானின் இஸ்பஹான் மாகாணத்தில் இஸ்ரேல் பெரியளவில் தாக்குதலை நடத்தியது. ஈரானின் அணுசக்தி நிலையம் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்ட ஒரு பகுதியைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவும் கூட இஸ்ரேல் தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறியுள்ளது. இருப்பினும், இஸ்ரேல் அரசு இது தொடர்பாக எந்தவொரு கருத்தையும் கூறவில்லை. தொடர்ந்து மவுனமாகவே இருந்து வருகிறது. இருப்பினும், ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியிருக்கும் என்று கூறப்படுகிறது.
"உக்கிரமாக பதிலடி கொடுப்போம்.." இஸ்ரேலுக்கு ஈரான் வார்னிங்.. உற்று பார்க்கும் அமெரிக்கா! பரபர
டார்கெட் எது: சர்வதேச ஊடகங்கள் இந்த தாக்குதல் தொடர்பான சாட்டிலைட் போட்டோக்களை ஆய்வு செய்துள்ளன. அதில் தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகே உள்ள இசஃபான் சர்வதேச விமான நிலையத்தின் வடகிழக்கு பகுதியில் ரஷ்யாவின் S-300 ஏவுகணைகள் இருப்பது அந்த சாட்டிலைட் படங்களில் தெளிவாகத் தெரிகிறது. சாட்டிலைட் படங்களில் இந்த S-300 இருப்பது தெளிவாகத் தெரிகிறது.. மேலும், Natanz என்ற அணுமின் நிலையமும் கூட இந்த தாக்குதல் நடந்த இடத்திற்கு வடக்கே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது..

அணுமின் நிலையம்: இந்தளவுக்கு சென்சிடிவ்வான பகுதியிலேயே இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பிலும் ரேடாரிலும் சிக்காமல் இஸ்ரேல் அங்குத் தாக்குதலை நடத்தியுள்ளது இதில் உறுதியாகிறது. அதுவும் பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணை, அணுமின் நிலையம் ஆகியவை அமைந்துள்ள முக்கிய பகுதியைத் தாக்கியுள்ளது.
இருப்பினும், ஈரான் பெரியளவில் தாக்குதல் நடக்கவில்லை என்றே தொடர்ந்து கூறி வருகிறது. இது தொடர்பாக ஈரான் அதிகாரிகள் கூறுகையில், "ஈரானின் வான்வெளியில் எந்தவொரு பொருளும் நுழையவில்லை. மேலும், இங்கே இதுபோன்ற ஏவுகணை தாக்குதல்கள் எதுவும் நடக்கவில்லை" என்றே தொடர்ந்து கூறி வருகிறார்கள். சாட்டிலைட் படங்களில் தாக்குதலால் சேதம் ஏற்பட்டது உறுதியானாலும் அதை ஈரான் மறுத்தே வருகிறது.
ரேடார் சேதம்: இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதல் S-300 அமைப்பை குறிவைத்தே நடத்தப்பட்டது போலத் தெரிகிறது. இதனால் S-300 பாதுகாப்பு அமைப்பின் ரேடார் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுதான் ஒரு தாக்குதலின் போது ஏவுகணைக்கு வழிகாட்ட முக்கியமானதாகும். இருப்பினும் ஏவுகணை அமைப்பில் எந்தவொரு பாதிப்பும் இல்லையாம்..
இருப்பினும், இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலின் முழுமையான சேதம் குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இரு தரப்பும் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலையும் கூற மறுப்பதால் இஸ்ரேல் என்ன ஆயுதங்களைப் பயன்படுத்தின.. இதனால் எந்தளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியாமலேயே இருக்கிறது.
-
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
கோமாவில் மொஜ்தபா கமேனி? ஈரான் புதிய உச்ச தலைவரின் கதையை முடித்த அமெரிக்கா – இஸ்ரேல்.. ஷாக் தகவல் -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
மோடி போனில் கேட்ட ரூட்.. நோ சொன்ன ஈரான்! 'சிக்கலில் இந்தியா'.. அந்த போன் காலில் பேசியது என்ன? -
ஈரானின் முக்கிய அணுசக்தி விஞ்ஞானியை கொன்றுவிட்டோம்.. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
கட்டவிழ்த்து விடப்பட்ட 4 கோடி பேரல் கச்சா எண்ணெய்.. ஆனாலும் ரேட் கொஞ்சம் கூட குறையலையே ஏன் தெரியுமா? -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
ஈரான் உச்ச தலைவர் சொன்ன மறுகணமே.. சீறி பாய்ந்த ஏவுகணைகள்! இஸ்ரேல் மீது 42வது அலை தாக்குதல் தொடங்கியது -
இந்தியா சமத்து பிள்ளையாக.. சொன்னதை கேட்கிறது.. சீண்டிய அமெரிக்க அதிபர் மாளிகை.. நிலைமை மோசமாகுது!












Click it and Unblock the Notifications