10 நிமிடத்தில் 100 ஏவுகணைகள்! அடங்க மறுக்கும் இஸ்ரேல்.. லெபனான் மீது கொடூர தாக்குதல்! மீண்டும் போர்?
பெய்ரூட்: ஈரான் போர் ஒரு வழியாக முடிவுக்கு வந்ததது என நாம் நிம்மதி அடைவதற்குள்ளேயே வளைகுடாவில் மீண்டும் ஒரு பதற்றம் ஏற்பட்டுள்ளது. லெபனான் மீது ஈரான் மிக மோசமான ஒரு தாக்குதலை நடத்தியுள்ள சூழலில், அதில் குறைந்தது 254 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இது அங்கு நிலைமையை மோசமாக மாற்றுகிறது.
வளைகுடாவில் இது கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்பித்தது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை நடத்தியது. ஒரு வாரத்திற்கு மேலாக நடந்த இந்த போரால் சர்வதேச அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. நீண்ட போராட்டத்திற்கு பிறகே நேற்றைய தினம் இந்த மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்காவும் ஈரானும் வெளியிட்டது.

லெபனான்
இதில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பில் ஈரான் மட்டுமின்றி லெபனான் உட்பட வளைகுடாவில் நடக்கும் அனைத்து தாக்குதலுமே நிறுத்தப்படும் எனப் பாகிஸ்தான் கூறியிருந்தது. இருப்பினும், இதை மறுத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, லெபனானுக்கும் இந்த போர் நிறுத்தத்திற்கும் தொடர்பில்லை என்றும் லெபனான் மீதான தாக்குதல் தொடரும் என்றும் கூறியது. வெறும் பேச்சு உடன் நிற்காமல் லெபனான் மீது தாக்குதலையும் ஈரான் ஆரம்பித்தது.
254 பேர் உயிரிழப்பு
இதற்கிடையே இஸ்ரேல் ராணுவம் லெபனான் மீது மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. வெறும் 10 நிமிட இடைவெளியில் 100க்கும் மேற்பட்ட டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் தாக்கியுள்ளது. இந்த மிக மோசமான தாக்குதலில் குறைந்தது 254 பேர் கொல்லப்பட்டு, 1,100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. காணாமல் போனோர், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களுக்கான தேடுதல் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.
மிக பெரிய தாக்குதல்
லெபனான் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட மிக பெரிய தாக்குதலில் ஒன்றாக இது இருக்கிறது. மத்திய கிழக்கில் போர் நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த கொஞ்ச நேரத்திலேயே இஸ்ரேல் இந்த தாக்குதலைத் தொடங்கியுள்ளது. லெபனான் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இல்லை எனச் சொல்லியே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்குப் பதிலடியாகவே ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
முதலில் நடந்த தாக்குதல் சைடா நகரின் ஒரு கஃபேயை தாக்கியது. அதில் எட்டு பேர் உயிரிழந்தனர்.. 22 பேர் காயமடைந்தனர். மற்றொரு ஏவுகணை பால்பெக்கில் இறுதிச் சடங்கில் நடந்த இடத்தை தாக்கியுள்ளது. அதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர். இப்படி பெரும்பாலான வான்வழித் தாக்குதல்கள், மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் நடந்துள்ளது. இது பெரும் சேதத்தையும் உயிர் இழப்பையும் ஏற்படுத்தின. பல இடங்களில், மீட்புக் குழுக்கள் இடிபாடுகளை அகற்றிக் காயமடைந்தவர்களை மீட்டன.
மீண்டும் ஆரம்பிக்கும் போர்?
இந்த தாக்குதலுக்கு லெபனான் அதிபர் ஜோசப் அவூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இந்தத் தாக்குதல்களை "மிருகத்தனமானது" என்று வன்மையாகக் கண்டித்தார். அவர், மேலும், "இன்று, இஸ்ரேல் மீண்டும் தனது ஆக்கிரமிப்பைத் தொடர்கிறது.. அமைதி முயற்சிகளையும் அப்பட்டமாக மீறி, ஒரு மிகப் பெரிய படுகொலையைச் செய்கிறது" என்று சாடியுள்ளார்.
இதற்கிடையே லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்தால்.. தற்காலிக போர் நிறுத்தத்திலிருந்து ஈரான் விலக நேரிடும் என ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் அங்கு நிலைமை எப்போது வேண்டும் என்றாலும் கையை மீறிச் செல்லும் என்றே அஞ்சப்படுகிறது.
-
காபி பேஸ்ட் பாகிஸ்தான்.. அமெரிக்கா சொன்னதை அப்படியே திரும்ப சொன்ன ஷெரீப்? வெடித்த சர்ச்சை -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
நாளை மறுநாள் முக்கியமான மீட்டிங்! களத்தில் அமெரிக்க அதிகாரிகள்! வளைகுடா எதிர்காலமே இதில்தான் இருக்கு -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க.. குவைத் வாழ் இந்தியர்களே உஷார்! முக்கிய உத்தரவு -
Iran-US war LIVE: போர் நிறுத்தம் அறிவித்தாலும் தொடரும் தாக்குதல் -
8 மணி கெடு! ஈரான் கையில் தான் எல்லாமே.. கடைசி நேரத்தில் கைவிரித்த ஜேடி வேன்ஸ்.. டிரம்ப் ஆட்டம்! -
டிரம்ப் நினைப்பது போல் ஈரானை முற்றாக அமெரிக்காவால் அழித்துவிட முடியுமா? உண்மை என்ன -
"கோமா.. படுகாயம்.." உயிருக்கு போராடும் ஈரானின் புதிய சுப்ரீம் லீடர்.. அமெரிக்க உளவு துறைக்கு போன ரிப்போர்ட் -
ஈரானின் உயிர் நாடி மீது தாக்குதல்.. நெருங்கும் கெடு! உக்கிரமடைந்த டிரம்ப்! -
"ஈரானை ஒரே இரவில் தாக்கி அழிப்போம்.." டிரம்ப் இறுதி எச்சரிக்கை.. உலக போரை ஆரம்பிக்கும் அமெரிக்கா? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல்












Click it and Unblock the Notifications