Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெஞ்சை நிமிர்த்தி வந்த இஸ்ரேல் "எலைட் போர்ஸ்".. அடித்தே ஓடவிட்ட லெபனான் படை வீரர்கள்! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

பெய்ரூட்: இஸ்ரேல் - ஈரான் போர் முற்ற தொடங்கி உள்ளது. இதில் ஈரானுக்கு சாதகமாக இருக்கும் லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனான் மீது தாக்குதல் நடத்திய பின்பே ஈரான் பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என்று இஸ்ரேலை தாக்கியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில்தான் லெபானில் இருக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தை கதி கலங்க வைத்தது இஸ்ரேல். துப்பாக்கி படத்தில் ஒரே நேரத்தில் 12 தீவிரவாதிகளை விஜய் மற்றும் கேங்க் சுடும் காட்சி பலருக்கும் நினைவு இருக்கும். அந்த காட்சி போலவே.. ஒரே நேரத்தில்.. சொல்லி வைத்தார் போல ஹிஸ்புல்லா இயக்கத்தினர் வாக்கி டாக்கி மற்றும் பேஜர் தாக்குதலுக்கு உள்ளாகினர். இதில் 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதை தொடர்ந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இருக்கும் பெய்ரூட்டில் இஸ்ரேல் தொடர் ஏவுகணை தாக்குதல்களை, வான்வழி தாக்குதல்களை நடத்தியது .

israel palestine israel palestine conflict

இப்படிப்பட்ட நிலையில்.. ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டார். அவரது பதுங்கு குழியை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா கொலை செய்யப்பட்டார். . ஒரு ஈரானிய இன்பார்மர் இஸ்ரேலுக்கு கொடுத்த முக்கியமான உளவுத்துறை தகவலின் அடிப்படையில், இந்த தாக்குதலை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

பதிலடி: இதற்கு பதிலடியாகவே ஈரான் நேற்று முதல்நாள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இப்படிப்பட்ட நிலையில், லெபனானுக்கு நுழைய முயன்ற இஸ்ரேலின் Egoz சிறப்புப் படைப் பிரிவு பின்வாங்கி உள்ளது. நேற்று லெபனான் உள்ளே ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்று உள்ளது இஸ்ரேலின் எலைட் படிப்பிரிவான Egoz சிறப்புப் படைப் பிரிவு.

அவர்களை தடுக்கும் விதமாக லெபனான் படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தி உள்ளனர். தரைவழி தாக்குதல் எல்லாம் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா ஸ்டைல். அதை இஸ்ரேல் செய்ய முயன்று அடிவாங்கி உள்ளது. ஹிஸ்புல்லாவுடன் நடந்த சண்டையில் 8 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர். மீதம் இருந்த வீரர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கிருந்து ஓடி உள்ளனர்.

இஸ்ரேல் வீரர்களை துப்பாக்கியால் தாக்கியும், கையால் அடித்தும், கையெறி குண்டுகளை வீசியும் ஹிஸ்புல்லா படை வீரர்கள் கொன்றுள்ளனர். இதனால் பயந்த இஸ்ரேல் வீரர்கள் வேறு வழியின்றி லெபனானில் இருந்து வெளியேறி உள்ளனர். லெபனானில் இருக்கும் தெற்கு எல்லை பகுதியை ஊடுருவ முயன்று இஸ்ரேல் தோற்று ஓடி உள்ளது. வடகிழக்கு எல்லைக் கிராமமான அடேஸ்ஸேவிற்குள் நுழைய முயன்ற இஸ்ரேலிய வீரர்களை திரும்பப் பெறும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் தெற்கு லெபனானைத் தாக்குவது இதுவே முதல்முறை. சமீபத்தில்தான் இஸ்ரேலிய ராணுவம் F-35 போர் விமானங்களை வைத்து அங்கே தாக்குதல் நடத்தியது. பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியான தாஹியில் கடுமையான தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டது.' கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஹிஸ்புல்லா ட்ரோன் பிரிவு தளபதி இஸ்ரேல் தாக்குதலில் கொலை செய்யப்பட்டார். இப்படிப்பட்ட நிலையில் அங்கே தரைவழி தாக்குதலை செய்ய முயன்று இஸ்ரேல் தோற்று உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+