2 ஆயிரம் பேரை படுகொலை செய்த இஸ்ரேல் கூறுகிறது காஸாவில் இருந்து 2 ராக்கெட் வீசப்பட்டதாம்!
ஜெருசலேம்: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை ஆக்கிரமிக்கும் வகையில் இனப்படுகொலையை அரங்கேற்றிய இஸ்ரேல் காஸா முனையில் இருந்து 2 ராக்கெட்டுகளை ஹமாஸ் வீசிவிட்டது என்கிறது..
காஸாவில் 28 நாட்கள் கொடும் போரை நிகழ்த்தியது இஸ்ரேல். இதில் 2 ஆயிரம் பேர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலானோர் பிஞ்சு குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள்தான். சுமார் 2 லட்சம் பேர் வீடிழந்து அகதிகள் முகாம்களில் தங்கி உள்ளனர்.

இந்த நிலையில் அங்கு 72 மணி நேர யுத்த நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகளும் வெளியேறிவிட்டன.
ஒட்டுமொத்த உலகையே அதிரச் செய்யும் வகையில் இனப்படுகொலை நிகழ்த்திய இஸ்ரேல் இன்று புது புகார் தெரிவித்துள்ளது. அதாவது காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் இயக்கம் 2 ராக்கெட்டுகளை வீசிவிட்டதாம்.. இதை ஒரு புகாராக சர்வதேச சமூகத்திடம் கூறிவருகிறது இஸ்ரேல்.












Click it and Unblock the Notifications