வடகொரியா அணுசக்தி சோதனை.. இரோஷிமா குண்டு வெடிப்புக்கு 17 மடங்கு அதிகமாகும்.. இஸ்ரோ
பியாங்கியாங்: வடகொரியாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அணுசக்தி சோதனையானது இரோஷிமாவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்கு 17 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது என இஸ்ரோ அறிக்கை அனுப்பியுள்ளது.
வடகொரியா தனது அணு ஆயுத சோதனை மூலம் அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளை மிரட்டி வந்தது. பாதுகாப்பில்லாத அணு ஆயுத சோதனையை நிறுத்துமாறு மேற்கண்ட நாடுகள் கேட்டு கொண்ட போதிலும் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் நிறுத்தவில்லை. இதனால் கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவவில்லை.
இந்த நிலையில் அந்நாடு மீது சர்வதேச பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் தயாரிப்பை கைவிடுவதாக வடகொரியா அறிவித்தது. அதற்கு கைமாறாக தங்கள் நாட்டின் மீதான பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என அமெரிக்காவிடம் கேட்டது.

நட்பு
தற்போது அமெரிக்காவுடன் வடகொரியா நட்பு பாராட்டுவது, அணுசக்தி சோதனை நடத்துவதாக மிரட்டுவது என உள்ளது. இந்தநிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு மண்டப் மலையில் வடகொரியா அணுசக்தி சோதனை நடத்தியது.

3 பேர் கொண்ட குழு
இந்த சோதனை குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு ஆய்வு மேற்கொண்டனர். 3 பேர் கொண்ட குழுவில் ஸ்ரீஜித், ரித்தேஷ் அகர்வால் மற்றும் ஏ எஸ் ராஜாவாட் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அது குறித்த ஆய்வறிக்கையை அவர்கள் தாக்கல் செய்தனர்.

இரோஷிமா
அதில் வடகொரியா நடத்திய அணுசக்தி சோதனை மிகவும் சக்தி வாய்ந்தது. அந்த சோதனையில் 245 முதல் 271 கிலோ டன் வெடிப்பொருள்களை கொண்டது. ஆனால் இரோஷிமாவில் கடந்த 1945 -ஆண்டு இரண்டாம் உலக போரின் போது அணுகுண்டு வீசப்பட்டது.

17 மடங்கு ஆற்றல்
அந்த அணுகுண்டில் 15 கிலோ டன்களே வெடிப்பொருட்கள் இருந்தன. எனவே வடகொரிய நடத்திய அணுஆயுத சோதனையானது இரோஷிமாவை அணுகுண்டை காட்டிலும் 17 மடங்கு ஆற்றல் மிக்கதாகும். இதனால்தான் இந்த சோதனை நடத்தப்பட்ட மண்டப் மலை சற்று நகர்ந்துள்ளது.

அறிக்கை
எனினும் நிலநடுக்கம் ஏதும் வரவில்லை. மவுண்ட் மண்டபத்திற்கு கீழ் 542 மீட்டர் ஆழத்தில் இந்த அணுசக்தி சோதனை நடத்தப்பட்டிருக்கலாம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையால் உலக நாடுகள் திக்குமுக்காடியுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications